Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

4ஆவது நாளாக திருமாவளவன்

Published on ஞாயிறு, 18 ஜனவரி, 2009 1/18/2009 10:23:00 AM // , ,

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. அவரது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் சில பகுதிகளில் அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டன. இன்று நள்ளிரவில் விழுப்புரத்தில் இரு பேருந்துகள் மீது பெட்ரோல் வீசி எரியூட்டப்பட்டன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதால் பேருந்துகள் காவல்துறை உதவியுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள திருமாவளவனை டாக்டர் இராமதாஸ் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தித்த இராமதாஸ், இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சுமத்தினார். உங்கள் முடிவால் இலங்கை தமிழர்களைக் காப்பற் முடியும். நீங்கள் மத்திய அரசை நம்புவதாகக் கூறுகிறார். நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!