Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அஹஹமதாபாத் குண்டு வெடிப்பு துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

Published on ஞாயிறு, 18 ஜனவரி, 2009 1/18/2009 10:11:00 AM // ,

கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் நாளன்று அஹமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான துணை குற்றப் பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.


மாநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட 3, 200 பக்கங்களைக் கொண்ட இந்த துணைக் குற்றப்பத்திரிகையில், அமீரா ரஜா கான் என்ற முக்கிய குற்றவாளி உள்பட 44 பேர் மறைந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டிருந்தது. இதில் 19 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது.

57 பேரை பலிவாங்கிய இந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒவ்வொரு குற்றவாளியும் என்னென்ன செய்தனர், குண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைத்தவர் எவர், எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப் பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!