Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 09, 2025

டென்னிஸ் தரவரிசை: சானியா

Published on: செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 // , , , , ,

பாட்டயா டென்னிஸ் போட்டி இறுதியாட்டம் வரை வந்த இந்தியாவின் சானியா மிர்ஸா மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.இப்போட்டிக்கு முன் தரவரிசையில் 126 ஆவது இடத்தில் இருந்த சானியா, இப்போட்டியில் இறுதியாட்டம் வரை வந்ததால் 39 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 87 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.அதேபோல் இரட்டையர் பிரிவில் இறுதியாட்டம் வரை சென்ற இந்தியாவின் போபண்ணா இரட்டையர் தரவரிசையில் 78ம் இடத்தைப் பெற்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் லியாண்டர் பயஸ்,...

இலங்கை: கருணா இயக்கத்தில்

இலங்கையில் விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியின் பிள்ளையான் முதல் அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தி வருகிறார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.இந்நிலையில், கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டு கட்சித்தலைமையிலிருந்து அறிவிக்கை அனுப்பிவைக்கப்பட்டதாம். கருணா விளக்கம் தராததால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது....

காங்கிரஸ்ஸுடன் பாஜக, கம்யூனிஸ்ட் கூட்டணி: சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற மாநிலக் கட்சியை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன.சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற கட்சி சிக்கிம் மாநிலத்தில் வலுவாக உள்ளது. இதன் தலைவர் பவன்குமார் சாம்சிங் நான்கு முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.இந்நிலையில் வரும் மேமாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு கடும்போட்டி...

சட்டக்கல்லூரி மோதல்: இது பாண்டிச்சேரி

புதுவை மாநிலத்தில் காலாப்பட்டில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ஈழப்பிரச்னையை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வலியுறுத்தி நகரின் மையப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமல் வகுப்புகளுக்குச் சென்று வந்தனர்.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு முதலாம் ஆண்டு படிக்கும் வில்லியனூரைச் சேர்ந்த...

பாண்டிச்சேரி: விமானநிலையம் செயற்பட

பாண்டிச்சேரியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம் எதிர்பார்த்தபடி வரும் மார்ச் மாதம் செயற்படாமல் போகலாம் என்றும் அது செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்றும் தெரிகிறது. இத்தகவலை துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஓடுபாதையையொட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது...

ராஜ்தாக்கரே தலைமறைவு என நீதிமன்றம்

மகராஷ்டிரா நிர்மான் சேனா தலைவர் தலைமறைவு என ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே பீகார் மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்ததை அடுத்து சுதீர் குமார் பப்பு என்ற வழக்கறிஞர் தாக்கரே மீது 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் ராஜ் தாக்கரே வரவில்லை.இதனை அடுத்து ஜாம்ஷெட்பூர்...

சுப்ரமணிய சுவாமி மீது முட்டை வீசித்

சென்னை உயர்நீதிமன்றம் வந்த ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி மீது அழுகிய முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிபதி முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்தேறியது.சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்ரமணியம் சுவாமி நீதிமன்றம் வந்திருக்கையில் திடீரென நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசுவதால் சுப்பிரமணிய சுவாமி‌யை தாக்குவதாகக் கூறி அவருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.100கோடிக்கு

தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபையில் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.அரசின் மொத்த வருவாய்: 58,270 கோடிகள்.நிதிபற்றாக்குறை: 3%மொத்த விற்பனை அடிப்படையில் மதிப்பு கூட்டு வரிஇரும்பு பெட்டி - முழு வரி விலக்குமிளகு சீரகத்திற்கு வரி விலக்கு பருப்பு, பயிறு, பட்டணிக்கு கொள்முதல் வரி ரத்து நெய், ஊறுகாய் வரி குறைப்பு உலர்ந்த திராட்சை, ஜவ்வரிசி, ஸ்டார்ச்,...

கங்குலி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா?

மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியை தங்கள் கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் அவர் போட்டியிட வேண்டுமென அரசியல் கட்சி ஒன்று கேட்டுக் கொண்டதாக கங்குலியின் மனைவி டோனா இன்று கூறினார்.இதுபற்றி அவர் கூறுகையில், "கங்குலி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மேற்கு வங்க அரசு விரும்புகிறது. ஒரு நிகழ்ச்சியில்...

பஸ் கவிழ்ந்து சபரிமலை பக்தர்கள் 11 பேர்

சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து 11 பேர் பலியானார்கள். 40 பேர் காயமுற்றுள்ளனர். அவர்களில் 20 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.ஆந்திராவிலிருந்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு வரும்போது கோட்டயம் அருகே எருமேலி என்னும் இடத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழந்து விழுந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமுற்றவர்களை கோட்டயம் மருத்துவக் கல்லூ மருத்துவமனை மற்றும் காஞ்சிராப்பள்ளி...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!