Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கங்குலி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா?

Published on செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 2/17/2009 08:22:00 PM // , , , ,

மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியை தங்கள் கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் அவர் போட்டியிட வேண்டுமென அரசியல் கட்சி ஒன்று கேட்டுக் கொண்டதாக கங்குலியின் மனைவி டோனா இன்று கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "கங்குலி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மேற்கு வங்க அரசு விரும்புகிறது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் லக்னோ சென்றிருக்கும்போது யாரோ ஒரு அமைச்சர் கங்குலி உத்திரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட வேண்டும் என்று சொன்னார்" என்று கூறினார். எந்தக் கட்சி அவரை அழைத்தது என்று கேட்டதற்கு தான் அரசியில் இல்லாததால் அரசியல்வாதிகள் பெயர் தனக்கு நினைவில்லை என்றும் அநேகமாக சமாஜ்வாதி கட்சியாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அமர்சிங்கிடம் இதுபற்றிக் கேட்டபோது, எங்கள் கட்சியிலிருந்து இதுவரை எவரும் அதிகாரப்பூர்வமான அனுகவில்லை என்றும், கங்குலி சமாஜ்வாதியில் இணைய விரும்பினால் அதை உடனே பரிசீலிப்போம் என்றும் அவர் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!