Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஒரிசாவில் புகைவண்டி கவிழ்ந்தது : 10 பேர் பலியானதாக சந்தேகம்

Published on: வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 // , , , , , , ,
ஒரிசாவின் ஜஜ்பூர் அருகே புகைவண்டி கவிழ்ந்ததாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவுராவிலிருந்து சென்னை வரும் சோழமண்டல விரைவு வண்டி இன்று இரவு 7.30 மணி அளவில் ஜஜ்பூர் சாலை அருகே இந்த வண்டியின் 12 பெட்டிகள் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

என்ஜினை அடுத்த 2 பெட்டிகள் கடுமையாக சேதமுற்றதாகக் கூறப்படுகிறது.

ஷாரூக் கான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மும்பை பாந்த்ராவிலுள்ள நடிகர் ஷாரூக் கான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர்.

அச்சமயம், ஷாருக்கான் வீட்டில் இல்லை. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

ஹிந்தி திரையுலகில் இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வடக்கில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் வடக்கில் உள்ள கெர்மடி தீவுக்கு அருகில் ரவோல் தீவை மையங்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை எரிமலைகள் வெடித்துச் சிதறின. ரிக்டர் அளவீட்டில் 6.1 என்ற கணக்கில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. சில விநாடிகளே நீடித்த இந்நில நடுக்கத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறினார்கள்.

எனினும், மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

தமிழகம்: விலை உயரும் மளிகைப் பொருட்கள்

தமிழகத்தில் அண்மைகாலமாக, மளிகைப்பொருட்கள் மிகவும் விலை உயர்வு அடைந்துவருகின்றன.

அரிசி மூட்டை ஒன்றுக்கு ரூ.400 அளவுக்கும், சர்க்கரை(சீனி) அதே அளவுக்கும், மிளகாய் கிலோவுக்கு 40-50 ரூபாய் விலையேற்றமும் கண்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் கிலோ ரூ.50/=க்கு விற்ற மிளகாய் இப்போது ரூ.100 தொடங்கி 120/= ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதல்லாமல் ரவை, கோதுமை, மைதா, வெந்தயம், கடுகு போன்றவையும் விலையேறியுள்ளன.

எனினும், ஆறுதலாக புளி, பூண்டு, எண்ணெய், மல்லி விலைகள் குறைந்தே காணப்படுகின்றன.

காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் இன்று வான் வெளித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். மற்றொருவர் காயமுற்றார்.

காஸா பகுதியிலுள்ள கான்யூனுஸ் என்ற இடத்தின் மீது இத்தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் இந்த தாக்குதலில் பலியானதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினார்கள்.

இஸ்ரேலுடன் சன்டை நிறுத்த ஒப்பந்தம் சில தினங்களில் ஏற்படக்கூடும் என்று காஸா பகுதியைத் தன் வசம் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம் இன்று கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலியான நபர் இஸ்ரேலைத் தாக்கத் திட்டமிருந்ததாகவும் அதனால்தான் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றதாகவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கூறியதாக அசோசியேட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இராக்கில் குண்டு வெடித்து 32 பேர் பலி

இராக்கில் தற்கொலைப்படையைச் சார்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 32 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

பாக்தாதின் தெற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இஸ்கந்திரியா என்னும் இடத்தில் நடந்த இச்சம்பவத்தில் 60 பேர் காயமுற்றனர். ஷியா முஸ்லிம்களைக் குறி வைத்து இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பலாவை நோக்கி இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது இடையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாக்தாத், மோசூல் நகரங்ளை அடுத்து இன்று மூன்றாவது நாளாக ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

10 சோமாலிய கடற்கொள்ளையர் பிடிபட்டனர் : ரஷ்யா

சோமாலிய கடற்கொள்ளையர் பத்துபேரை பிடித்துவிட்டதாக ரஷ்ய கடற்படை கூறியுள்ளது. அவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன.

சோமாலியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையைத் தடுக்கும் விதமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் என்ற போர்க்கப்பல் இன்று மூன்று படகுகளையும் அதிலிருந்து 10 கடற்கொள்ளையர்களையும் பிடித்ததாக அறிவித்ததது. 10 பேரும் சோமாலியாவைச் சார்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடற்கொள்ளையர் 9 பேரைப் பிடித்ததாக நேற்று அமெரிக்கா கூறியிருந்தது.

சோமாலியக் கடற்பரப்பில் கடற் கொள்ளையர் அந்தப் பகுதியாக வரும் கப்பல்களை வழிமறித்து பிடித்து வைத்துக் கொண்டு கப்பல் உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடும் வழக்கம் தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் பலவற்றின் கப்பல்கள் இவ்வாறு பிடிக்கப் பட்டு அதிக தொகை கொடுத்து மீட்கப் பட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இந்தியக் கடற்படையினர் தற்போது இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதாரி வழக்கு : இருவருக்கு மரண தண்டனை

நிதாரி கொலை வழக்கில் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரீந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து மத்திய புலணாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நொய்டாவில் சிறுவர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்பட 19 பேரைக் கொலை செய்ததாக இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்த இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து நடந்த விசாரணையில் 57 சாக்கு மூட்டைகளில் மனித உறுப்புகள் மற்றும் 700 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டன.

நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை விவகாரம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் நாள் மத்திய புலணாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப் பட்டது. புலணாய்வு நிறுவனம் 16 வழக்குகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து விட்டது. மேலும் 3 வழக்குகளில் குற்றப் பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை.

பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் : அரசு அனுமதி

கூட்டாண்மை நிறுவனங்களின் பொறுப்பு வரையறுக்கப் பட்டதாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்று நிறுவனங்கள் விவகார அமைச்சர் குப்தா நேற்று கூறினார்.

தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், பொறுப்பு வரையறுக்கப்பட் கூட்டாண்மை நிறுவன (Limited Liability Partnership - LLP) சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் முதல் LLP நிறுவனம் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று கூறினார்.

தற்போதைய கூட்டாண்மை நிறுவனச் சட்டத்தின்படி நிறுவனத்தின் கடன்களுக்கு பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புதாரிகளாவார்கள். புதிய சட்டத்தின் மூலம் நிறுவனங்களின் கடன்களுக்கு பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காயர் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலோர் கூட்டாண்மை நிறுவனம் என்ற அடிப்படையிலேயே இதுவரை தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். LLP சட்டம் நிறைறேவற்ற வேண்டும் என்று நீண்டநாட்களாக இவர்கள் கோரிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்புச் சட்டம் : மத்தியர அரசுக்கு உச்சநீதி மன்றம் அறிவிக்கை

கருக்கலைப்புச் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கை அனுப்பியுள்ளது. மும்பை உயர்நீதி மன்றத்தில் கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து, உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமயிலான அமர்வு இந்த அறிவிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

ஹரீஷ் மேத்தா மற்றும் நிகிதா தம்பதியினருடன் மருத்துவர் நிகில் டாடர் இந்த வழக்கைத் தொடர்ந்தார். முன்னதாக கடந்த ஆண்டு, நிகிதாவின் முதல் கருத்தரிப்பின் போது கருவில் இருந்த 24 வாரக் காருவின் இதயத்தில் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.  இதனைக் கலைக்கக் கோரப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.

அமெரிக்காவில் விமான விபத்து

அமெரிக்காவில் விமானம் ஒன்று நெறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 49 பேர் பலியாகி உள்ளனர்.

74 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 44 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. நியூஜெர்சியிலிருந்து பப்பாலோ நகருக்கு இந்த விமானம் சென்றது எனவும் பனிமூட்டமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பப்பாலோ நகருக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்ததாகவும் இதில் விமானத்தில் பயணம் செய்த 48 பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரயில்வே பட்ஜெட் : தாக்குதல் செய்தார் லாலு

மத்திய இரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதாவ் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 50 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள அனைத்து வகை பயணக் கட்டணங்களும் 2 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

சென்னை - பெங்களூர், சென்னை - எர்னாகுளம், டில்லி-பாட்னா உள்ளிட்ட 6 வழித்தடங்களில் புல்ல் இரயில் சேவை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 1100 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரயில் பாதைகள் அமைக்கப்படும்.

2009-2010 ஆம் ஆண்டில் 43 புதிய இரயில்கள் இயக்கப்படும் என்றும் 14 இரயில்களின் வழித்தடம் நீட்டிக்கப்படும் என்றும், 14 இரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டு்ள்ளது.

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவை, பிப். 11: கோவையில் திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

இச் சோதனையில், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூரை சேர்ந்தவர் மணி. விடியோ கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் இருந்து புதுப்பட சிடிக்களை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான திருட்டு விடியோ தடுப்பு போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

அவரின் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு போலீஸôர் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸôருக்கு மணி தகவல் அளித்தார். போலீஸôரின் திட்டப்படி தலைமைக் காவலர்கள் செல்வராஜ் மற்றும் முகமதுகானிடம், மணி லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய போலீஸôர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். திருட்டு விடியோ தடுப்பு அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸôர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இச் சம்பவத்தில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி, தலைமைக் காவலர்கள் செல்வராஜ், முகமதுகான், ஆறுமுகம் ஆகியோர் தலைமறைவாகினர்.

அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமறைவான 4 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, சுண்டக்காமுத்தூர் மெயின்ரோடு, கோவைப்புதூரில் உள்ள இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உன்னிகிருஷ்ணன், கருணாகரன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் சோதனை நடத்தினர்.

இதில், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!