Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நிதாரி வழக்கு : இருவருக்கு மரண தண்டனை

Published on வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 2/13/2009 07:43:00 PM // , , , , , ,

நிதாரி கொலை வழக்கில் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரீந்தர் கோலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து மத்திய புலணாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.


2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நொய்டாவில் சிறுவர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்பட 19 பேரைக் கொலை செய்ததாக இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்த இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து நடந்த விசாரணையில் 57 சாக்கு மூட்டைகளில் மனித உறுப்புகள் மற்றும் 700 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டன.

நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை விவகாரம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் நாள் மத்திய புலணாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப் பட்டது. புலணாய்வு நிறுவனம் 16 வழக்குகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து விட்டது. மேலும் 3 வழக்குகளில் குற்றப் பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!