Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனம் : அரசு அனுமதி

Published on வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 2/13/2009 05:00:00 PM // , , , , ,

கூட்டாண்மை நிறுவனங்களின் பொறுப்பு வரையறுக்கப் பட்டதாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்று நிறுவனங்கள் விவகார அமைச்சர் குப்தா நேற்று கூறினார்.


தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், பொறுப்பு வரையறுக்கப்பட் கூட்டாண்மை நிறுவன (Limited Liability Partnership - LLP) சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் முதல் LLP நிறுவனம் இந்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று கூறினார்.

தற்போதைய கூட்டாண்மை நிறுவனச் சட்டத்தின்படி நிறுவனத்தின் கடன்களுக்கு பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புதாரிகளாவார்கள். புதிய சட்டத்தின் மூலம் நிறுவனங்களின் கடன்களுக்கு பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டியதில்லை.

வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காயர் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலோர் கூட்டாண்மை நிறுவனம் என்ற அடிப்படையிலேயே இதுவரை தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். LLP சட்டம் நிறைறேவற்ற வேண்டும் என்று நீண்டநாட்களாக இவர்கள் கோரிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!