Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இராக்கில் குண்டு வெடித்து 32 பேர் பலி

Published on வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 2/13/2009 08:48:00 PM // , , , , ,

இராக்கில் தற்கொலைப்படையைச் சார்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 32 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.


பாக்தாதின் தெற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இஸ்கந்திரியா என்னும் இடத்தில் நடந்த இச்சம்பவத்தில் 60 பேர் காயமுற்றனர். ஷியா முஸ்லிம்களைக் குறி வைத்து இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பலாவை நோக்கி இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது இடையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாக்தாத், மோசூல் நகரங்ளை அடுத்து இன்று மூன்றாவது நாளாக ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!