Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

10 சோமாலிய கடற்கொள்ளையர் பிடிபட்டனர் : ரஷ்யா

Published on வெள்ளி, 13 பிப்ரவரி, 2009 2/13/2009 08:35:00 PM // , , , , , , ,

சோமாலிய கடற்கொள்ளையர் பத்துபேரை பிடித்துவிட்டதாக ரஷ்ய கடற்படை கூறியுள்ளது. அவர்களின் 3 படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன.


சோமாலியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையைத் தடுக்கும் விதமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் என்ற போர்க்கப்பல் இன்று மூன்று படகுகளையும் அதிலிருந்து 10 கடற்கொள்ளையர்களையும் பிடித்ததாக அறிவித்ததது. 10 பேரும் சோமாலியாவைச் சார்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடற்கொள்ளையர் 9 பேரைப் பிடித்ததாக நேற்று அமெரிக்கா கூறியிருந்தது.

சோமாலியக் கடற்பரப்பில் கடற் கொள்ளையர் அந்தப் பகுதியாக வரும் கப்பல்களை வழிமறித்து பிடித்து வைத்துக் கொண்டு கப்பல் உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடும் வழக்கம் தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் பலவற்றின் கப்பல்கள் இவ்வாறு பிடிக்கப் பட்டு அதிக தொகை கொடுத்து மீட்கப் பட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இந்தியக் கடற்படையினர் தற்போது இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!