Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

தமிழகம்: நீதிபதி பெயர் கூறி செல்பேசிகள்

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள செல்பேசி விற்பனை கடையில் உதயகிரி என்ற 23 வயடு வாலிபர் விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.கடந்த 20ம் தேதி 12 மணிக்கு உதயகிரி கடையில் இருந்த போது, வாலிபர் ஒருவர் வந்தார். கடலூர் நீதிபதிக்கு மொபைல் போன் தேவைப்படுகிறது. கடையில் உள்ள ஐந்து மொபைல் போன்களை எடுத்து வந்தால் பார்த்து வாங்கிக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.உதயகிரி கடையில் இருந்து 33 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து...

தமிழகம்: திமுக-காங் கூட்டணி இற்றைப்படுத்தப்பட்டது?

பதினைந்தாம் மக்களவைக்கான எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும்,அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. தே.மு. தி.க.வும் தனித்துப் போட்டியிட இருப்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில், தி.மு.க.,...

தீயிட்டுக் கொளுத்தப்படும் 170 கோடி

திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகள் வழியாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள், பழைய 5 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும் சேகரிக்கப்பட்டன. இவை ரூ.170 கோடி அளவுக்குச் சேர்ந்தது. இந்தக் கிழிந்த நோட்டுகள் கட்டுக்கட்டாக சரக்குப்பெட்டகங்களில் ஏற்றப்பட்டு சரக்கு தொடர்வண்டிகள் மூலமாக சென்னை வந்தடைந்தன.அதன்பின் அவை சுமையுந்துகளில் பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே அவை முறையாகப்...

புதுவை வந்த ராகுல் பேட்டி.

இன்று விமானம் மூலம் சென்னை வந்தார் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி. அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் புதுவை வந்த அவரிடத்தில் நிருபர்கள் பேட்டி கண்டனர்: வருண் காந்தியின் பேச்சு குறித்து ராகுல் கருத்து தெரிவித்த போது,வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும்...

பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்கும் முயற்சி தோல்வி!

பா.ம.க.வை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கச் செய்வதற்கான முயற்சி நடந்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் அகமது பட்டேல், அன்புமணியை சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க. கூட்டணியை விட்டு விலகக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.முக்கிய கட்சியுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் கூட்டணியில் பா.ம.க. நீடிக்க முடியாததற்கான காரணங்களை அவர்களிடம் அன்புமணி விளக்கியதாக சொல்லப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியின் இறுதி கட்ட முயற்சியும் வெற்றி பெறவில்லை.சோனியா மற்றும் தலைவர்கள் கருத்து...

இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!

இந்தியா கடற்படைக்குச் சொந்தமான சாப்பர் வகை ஹெலிகாப்டர் ஒன்று கோவா கடற்கரைப் பகுதியில் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த மூவர் எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.கோவா கடற்கரையிலிருந்து 22 மைல் தொலைவில் இன்று காலை 11 மணி அளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதிலிருந்த இராணுவத்தினர் மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். அவர்களுக்குச் சிறிய அளவில் காயமேற்பட்டடதாகவும், அவர்கள் கடற்படை மருத்துவமனையில்...

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கியது கோவா!

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கி கோவா மாநில சட்டமன்றத்தில் செவ்வாய் கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பானாஜியில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டை கோவாவில் தடை செய்திருந்தது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரெஜினால்டோ கொண்டு வந்த ஒரு நபர் தீர்மானத்தை அடுத்து மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜல்லிக் கட்டு சட்டபூர்வமாக்கப் பட்டது.தீர்மானத்தை முன்மொழிந்த ரெஜினால்டோ பாரம்பரியமான இந்த விளையாட்டு...

சீக்கியர்களுக்கு எதிராக வருண் பேசியதாக பஞ்சாப் அரசியலில் பரபரப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் பிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண் சீக்கியர்களுக்கு எதிராகப் பேசியதாக பஞ்சாப் அரசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியினரும், சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ஆளும் அகாலி தள கட்சி இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.உத்திரப் பிரதேசத்தில் பிலிபிட் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சீக்கியர்களுக்கு எதிராகப் பேசிய வருணின் பேச்சுக்கள்...

அசாமில் பத்திரிகை ஆசிரியர்

"அஜி" என்ற அசாமிய பத்திரிகையின் தலைமைய ஆசிரியரான அனில் மஜூம்தார் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய் கிழமை இரவு 10.30 மணியளவில் சுட்டுக் கொல்லப் பட்டார்.அசாமியத் தலைநகர் கெளஹாத்தியில் ராஜ்கர் சாலையில் உள்ள அவரது வீட்டினருகே இளைஞர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி வீட்டின் வாயிற்கதவைத் திறக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத 7 பேர் அவரைத் தாக்கியதாகவும் பின்னர்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!