Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 09, 2025

உயர்நீதி மன்ற கலவரம் : காவல் அதிகாரிகள் இடைநீக்கம்!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி வழக்கறிஞர்கள் - காவலர்கள் இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை இடை நீக்கம் செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் பணித்துள்ளது....

மன்னிப்புக் கேட்கப் போவதில்லை - வருண்!

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்களும் வருணின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று வருண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தான் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் தாம் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.சமூக அமைதிக்குப் பங்கம்...

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அலிபுர்துவார் நகரில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயமுற்றுள்ளனர்.நகரின் செளபதி என்ற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே இந்த சைக்கிள் குண்டு வெத்ததாக மேற்கு வங்க வடக்குப் பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் கூறினார். இந்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என்றும் அதன் தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும்...

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெருமளவிலான வெடிகுண்டுகள்

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பெருமளவிலான வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தைக் காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று பறிமுதல் செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலை சீர் குலைக்கும் வகையில் இந்த குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் அனுமானித்துக் கூறினர்.ஜஷ்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த லோடம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது....

லாலுவின் மைத்துனர் காங்கிரசில்

ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது."நான் காங்கிரசில் இணைவதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களுக்கு (ராஷ்டிரீய ஜனதா தளத்தினருக்கு) என்னுடைய அனுதாபங்களை கூறிவிட்டேன். கண்டிப்பாக நான் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கு, எப்படி என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்" என்று அவர்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!