Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

லாலுவின் மைத்துனர் காங்கிரசில் இணைந்தார்

Published on புதன், 18 மார்ச், 2009 3/18/2009 01:20:00 AM // , , , , ,

ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் செவ்வாய் கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.

"நான் காங்கிரசில் இணைவதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களுக்கு (ராஷ்டிரீய ஜனதா தளத்தினருக்கு) என்னுடைய அனுதாபங்களை கூறிவிட்டேன். கண்டிப்பாக நான் தேர்தலில் போட்டியிடுவேன். எங்கு, எப்படி என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே மற்றும் இக்பால் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சாது யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வானிடம் லாலு பிரசாத் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

சாது யாதவ் தற்போது கோபால்கன்ஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!