Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மன்னிப்புக் கேட்கப் போவதில்லை - வருண்!

Published on புதன், 18 மார்ச், 2009 3/18/2009 05:30:00 PM // , , , , , , ,

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்களும் வருணின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று வருண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தான் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் தாம் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக இவர் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை உத்தரவிட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியிடம் இவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு அக்கட்சிக்கும் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

நான் என்னுடைய நம்பிக்கையில் பெருமிதம் அடைகிறேன். இதற்காக எவரிடமும் மன்னிப்புக் கோரப் போவதில்லை. நான் காந்தி, இந்து, இந்தியன். அரசியல் காழ்ப்புணர்வில் நான் பலியாக்கப் பட்டுள்ளேன். நான் பேசியதாக ஒலிபரப்பானவை என் பேச்சுக்கள் அல்ல. அது என் குரலும் அல்ல. சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் நான் எதுவும் பேசவில்லை என்றும் வருண் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!