Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அலிபுர்துவார் நகரில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயமுற்றுள்ளனர்.

நகரின் செளபதி என்ற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே இந்த சைக்கிள் குண்டு வெத்ததாக மேற்கு வங்க வடக்குப் பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் கூறினார். இந்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என்றும் அதன் தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இது உல்பா இயக்கத்தினரின் செயலாக இருக்குமா? என்ற கேள்விக்கு உல்பா இயக்கத்தினர் இங்கு ஏன் வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!