Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

தங்கம் விலை குறையுமா?

Published on: புதன், 4 மார்ச், 2009 // , , , , ,

வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்துவரும் தங்கத்தின் விலை இவ்வாரத் தொடக்கம் முதல் குறைய ஆரம்பிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனவரி மாதமே ஒரு பவுன் 10,000 ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியிருந்த தங்கம் தினமும் 200, 300 என்று விலை ஏறி உச்சபட்சமாக நேற்றைக்கு முன்பு 11,464 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆயினும் ஆறுதல் அளிக்கும் விதமாக, நேற்று பவுனுக்கு ரூ.232 குறைந்து ரூ. 11,232 என்ற விலையில்...

பள்ளியில் பால் குடித்த 61 குழந்தைகள் உடல் நலக்கேடு!

குஜராத்தில் பள்ளி ஒன்றில் பால் குடித்த 61 பள்ளிக் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.குஜராத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மாநில அரசு 200 மில்லி பால் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது. செவ்வாய் கிழமை பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பட்காவாடா என்ற கிராமத்தில் உள்ள பகுதியில் செவ்வாய் கிழமை பள்ளி தொடங்கிய பின் 97 குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.பாலைக் குடித்து சில நேரம் கழித்து குழந்தைகள்...

தமிழகத்தில் பா.ஜ.க தனித்துப்போட்டி- இல.கணேசன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். பா.ஜனதாவை பொருத்தவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அமைப்பு ரீதியாக தேர்தல் பணியை துவங்கிவிட்டோம்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆய்வு செய்துவிட்டோம்.தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதா அல்லது ஓரிரு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதா என்பதை 12ஆம் தேதி நடக்கும் மாநில தேர்தல் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.இம்மாதம் 15ஆம் தேதி வேட்பாளர் விபரங்களை முறைப்படி...

இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பினர்!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பியுள்ளனர்.நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.தாக்குதலில் பலத்த காயமடைந்த திலான் சமரவீர கொழும்பிவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே வரும் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகள் பற்றி முடிவு எடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் குழு (ஐ.சி.சி)...

கேரளா: தொகுதிப் பங்கீட்டில் இடதுசாரிகளிடையே பிளவு?

கேராளாவில் மக்களவைத் தொகுதிப் பங்கீட்டில் இடது சாரிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.2004ஆம் ஆண்டு தேர்தலில் 14 இடங்களில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், 4 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், ஜனதா தளம் (எஸ்), கேரளா காங்கிரஸ் (ஜோசப்) ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.செவ்வாய் கிழமை நடைபெற்ற இடது முன்னணி கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இடது முன்னணி தலைவர் வைக்கம் விஸ்வம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு...

குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ்

குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சி கூறியுள்ளது.பகுஜன் சமாஜ்வாதி கட்சி குஜராத்தை முக்கியமான மாநிலமாகக் கருதுவதால், குஜராத்தின் 26 தொகுதிகளிலுதம் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர். பி. சிங் கூறினார்.2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 182 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. ...

திரிபுரா மக்களவைத் தேர்தல் இடதுசாரி வேட்பாளர்கள்

திரிபுரா மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போதைய மக்களவை உறுப்பினர்களே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு திரிபுரா தொகுதியில் காகென் தாஸ் என்பவரும் கிழக்கு திரிபுரா (தனி) தொகுதியில் பஜுபன் ரீங் ஆகியோர் போட்டியிடுவார்கள். இதுவரும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்.பஜுபன் ரீங் கிழக்கு திரிபுரா தொகுதியில் 1980 முதல் 9 முறை போட்டியிட்டு 7 முறை...

பஞ்சாப், சண்டிகர் மாநில கல்லூரி ஆசிரியர்கள் 72 மணி நேர வேலை

பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்தைச் சார்ந்த அரசு மற்றம் தனியார் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி செவ்வாய் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.பல்கலைக் கழக மாணியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி பஞ்சாப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த பந்திற்கு அழைப்பு விடுத்தது. 5 பல்கலைக்க கழகங்கள், 54 அரசுக் கல்லூரிகள மற்றும் 170 தனியார் கல்லூரிகள்...

தி.மு.க. வேட்பாளர் தேர்வு நேர்காணல் மார்ச் 25ஆ‌ம் தேதி நடைபெறும் - க.அன்பழகன்

பாராளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பம் 5ஆ‌ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும். தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மார்ச் 15ஆ‌ம் தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் 25ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி, பொது செயலர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.பாராளுமன்ற வேட்பாளர் பொது தொகுதிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.10 ஆயிரம், தனித்தொகுதி விண்ணப்ப கட்டணம் ரூ.5...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!