Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

பஞ்சாப், சண்டிகர் மாநில கல்லூரி ஆசிரியர்கள் 72 மணி நேர வேலை

Published on புதன், 4 மார்ச், 2009 3/04/2009 02:49:00 AM // , , , , , , ,

பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்தைச் சார்ந்த அரசு மற்றம் தனியார் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி செவ்வாய் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக் கழக மாணியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி பஞ்சாப் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த பந்திற்கு அழைப்பு விடுத்தது. 5 பல்கலைக்க கழகங்கள், 54 அரசுக் கல்லூரிகள மற்றும் 170 தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் பணி புரியும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.

நடத்தைவிதிகள் நடைமுறைப்படுத்தப் பட்டதால் செவ்வாய் கிழமையன்று சில ஆசிரியர்கள் குழப்பமடைந்து பணிக்குச் சென்றனர் எனவும், சுமார் 7000 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாகவும் இன்று முதல் அனைத்து ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் இக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜகவத் சிங் கூறினார்.

உத்திரப் பிரதேம், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல்கலைக் கழக மாணியக் குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டதாகவும், பொருளாதார வசதியுடைய பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் அகாலிதள கட்சியைப் புறக்கணிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!