Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

தி.மு.க. வேட்பாளர் தேர்வு நேர்காணல் மார்ச் 25ஆ‌ம் தேதி நடைபெறும் - க.அன்பழகன்

பாராளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பம் 5ஆ‌ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும். தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மார்ச் 15ஆ‌ம் தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் 25ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி, பொது செயலர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

பாராளுமன்ற வேட்பாளர் பொது தொகுதிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.10 ஆயிரம், தனித்தொகுதி விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும். விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமைக்கழகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் எ‌ன்றும், தோழமைக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படுமானால் அந்த தொகுதிகளுக்கு செலுத்திய விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்களுக்கு வரைவு காசோலை மூலம் திருப்பி வழங்கப்படும் எ‌ன்றும் தி.மு.க. பொது செயலர் க.அன்பழகன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!