Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

பள்ளியில் பால் குடித்த 61 குழந்தைகள் உடல் நலக்கேடு!

Published on புதன், 4 மார்ச், 2009 3/04/2009 01:12:00 PM // , , , , ,

குஜராத்தில் பள்ளி ஒன்றில் பால் குடித்த 61 பள்ளிக் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

குஜராத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மாநில அரசு 200 மில்லி பால் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது. செவ்வாய் கிழமை பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பட்காவாடா என்ற கிராமத்தில் உள்ள பகுதியில் செவ்வாய் கிழமை பள்ளி தொடங்கிய பின் 97 குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

பாலைக் குடித்து சில நேரம் கழித்து குழந்தைகள் பள்ளி வளாகத்திலேயே வாந்தி எடுத்தனர். இதனால் அந்தப் பள்ளியில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து அந்தக் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர் மருத்துவமனைப் பகுதியில் பெரும் திரளாகக் கூடினர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கு முன் உற்பத்தி தேதிதியை சரிபார்த்த பின்னரே கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.

தரமற்ற பால் எங்களுக்குத் தேவையில்லை. நாளை முதல் இத்தகைய பால் பாக்கெட்டுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மாநில அரசின் பால் வழங்கும் திட்டத்தின் படி இனி எங்கள் குழந்தைகள் பள்ளியில் பால் குடிக்காது என்று அந்தப் பகுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!