Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பினர்!

Published on புதன், 4 மார்ச், 2009 3/04/2009 12:34:00 PM // , ,

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த திலான் சமரவீர கொழும்பிவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே வரும் 2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகள் பற்றி முடிவு எடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் குழு (ஐ.சி.சி) விரைவில் கூட இருக்கிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!