Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் 3 இராணுவத்தினர் கொலைக் குற்றவாளியாக அறிவிப்பு!

ஜம்மு கஷ்மீரில் கடந்த மாதம் பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்ற குற்றச் சாட்டை விசாரிக்க அமைக்கப் பட்ட விசாரணை நீதி மன்றம் மூன்று இராணுவத்தினர் குற்றம் செய்தததாக அறிவித்தது. அவர்கள் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

ஸ்ரீநகரில் 15ஆம் கம்பெணியின் பிரிகேடியர் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஒரு துணை கமிஷனர் மற்றும் இரு இராணுவ வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீதிமன்ற விசாரணை விரைவில் துவங்கும். குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை இருக்கக் கூடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

இராணுவம் மனித உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இவர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் அறியலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பிப்ரவரி 21ஆம் நாள் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை அடுத்து கஷ்மீர் முழுவதும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்ங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.

சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டி!

ஐ.நா. துணைச் செயலாளராக பதவி வகித்த சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளார்.
சசி தரூர், ஐ.நா சபை பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


கேரளாவில் இருந்து போட்டியிடும் 16 வேட்பாளர்களையும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 8 வேட்பாளர்களையும், சட்டீஸ்கரில் இருந்து 2 வேட்பாளர்களையும், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒரு வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி இந்தப் பட்டியலில் அறிவித்துள்ளது.

கஷ்மீரில் மூன்று கொரில்லாக்கள் கொல்லப் பட்டனர்

கஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராடும் இயக்கங்களைச் சேர்ந்த மூன்று கொரில்லாக்கள் இன்று கொல்லப் பட்டனர். கஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் அருகே உள்ள ரங்வர் என்னும் வனப் பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொல்லப் பட்டனர்.

இன்று நடந்த தேடுதலின்போது வனத்தைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் நடந்த துப்பாக்கிச் சன்டையில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பறக்கும் விமானத்தில் குழந்தையைப் பெற்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்ற பெண்.

நியூசிலாந்து (AFP) பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் அங்கிருந்த குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டார்.

போலீசாரும் பசுபிக் ப்ளூ விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்தாக நியூசிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி நேற்று ஒளிபரப்பானது.

விமானம் சுத்தம் செய்யும் பணியாளரால் விமானம் தரை இறங்கிய பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அக்குழந்தை கழிவறைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

150 பயணிகளுடன் சென்ற அவ்விமானத்தில் யாரும் குழந்தை பெற்றதாக யாதொரு சாத்தியக்கூறும் காணப்படவில்லை.

ஆனால் அப்பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விட்டதாக வந்து கேட்டபோது அப்பெண்ணின் பலவீனத்தாலும் ரத்தக் கறையுடன் காணப்பட்டதாலும் சந்தேகமுற்ற அதிகாரிகள் விசாரித்தபோது மேற்கண்ட விஷயம் தெரிய வந்தது.

தற்போது தாயும் குழந்தையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகளை வன்புணர்ந்ததாக தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது!

ஷிம்லாவில் உள்ள காது கேளாதோர் மற்றும் ஊமைகளுக்கான பள்ளியில் 14 முதல் 16 வயதுடைய ஆறு மாணவிகளை கடந்த ஒரு ஆண்டு காலத்தில் வன்புணர்ந்ததாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பள்ளியின் தற்காலிக தலைமையாசிரியரான விஜய் மற்றும் ஆசிரியர்கள் தினேஷ் மற்றும் வினோத் ஆகியோதை வியாழக் கிழமையன்று கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்தனர். மேலும் அமர்ஜித் என்ற மற்றொரு குற்றவாளியையும் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பள்ளியின் விடுதியில் 22 பேர் படித்து வருவதாகவும், விடுதியில் சமையல் பணி செய்யும் பெண் இரவில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக விடுதி கண்கானிப்பாளர் இல்லாத நிலையில் விடுதியில் தங்கியிருப்போர் மீது செக்ஸ் கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

4 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் இடை நீக்கம்!

கஷ்மீரில் போலி என்கவுண்டர் மூலம் தச்சர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த ஒரு துணை கமாண்டோ மற்றும் மூன்று காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புல்வாமா மாவட்டத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமையன்று 35 வயதுடைய குலாம் முகைதீன் என்பவரை அவரது வீட்டில் மத்திய ரிசர்வ் படையின் 181 படைப்பிரிவினர் சுட்டுக் கொன்றனர். கடந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் படையினரால் கொல்லப்படுவது இது மூன்றாவது நிகழ்வாகும்.

பிகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

காங்கிரஸ் கட்சி, பிகாரில் 26 தொகுதிகளி்ல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சீட் மறுக்கப்பட்ட அவரது மச்சான் பப்பு யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார். இதனால் லாலு-காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. பிகாரில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இதில் 25 தொகுதிகளில் லாலுவின் கட்சியும் 12 இடங்களில் மத்திய அமைச்சர் ராம் விவாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தியும் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 3 இடங்களை மட்டும் இவர்கள் ஒதுக்கினர்.இதையடுத்து லாலுவுக்கு பதிலடி கொடுக்க அவரது கட்சியி்ன் அதிருப்தியாளர்களுக்கு காங்கிரஸ் வலைவீசி வருகிறது.

இதில் லாலு கட்சியின் எம்பியான கிரிதாரி யாதவ், ரமணி ராம் ஆகியோர் ஆர்ஜேயிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளனர். இதனால் லாலுவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகியுள்ளது.

வருணுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வருணுக்கு, பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.தேர்தல் பிரசாரத்தின் போது மதவாதத்தை பரப்பும் வகையில் வருண் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் வரை அவரை காவல்துறையினர் கைது செய்வதற்கு தடைவிதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமீன் கோரி வருண் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி கேத்ரபால் இந்த உத்தரவை வழங்கினார். வருணுக்கு எதிரான புகார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியிருப்பதால், டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க அதிகார எல்லை இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.

வருண் மீது தேர்தல் கமிசன் பிடி இறுகுகிறது!

தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளையும் சட்டத்தையும் மீறி முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருணின் மீதான பிடியைத் தேர்தல் கமிசன் இறுக்குகிறது. தேர்தல் கமிசன் அனுப்பிய விளக்க நோட்டீஸிற்கு, தனது பேச்சைத் திரித்துள்ளனர் எனவும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை எனவும் வருண் விளக்கமளித்திருந்தார். ஊடகங்களில் வெளியான வருண் பேச்சு அடங்கிய வீடியோ டேப்பில் குளறுபடி நடந்துள்ளது என்று வருண் கூறுவாரேயானால் அதனை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என தேர்தல் கமிசன் கமிசனர் திரு. என். கோபாலசாமி கூறினார். மேலும், அதனை நிரூபிப்பதற்கு வருணுக்கு 24 மணி நேர கால அவகாசம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



தேர்தல் கமிசனின் உறுதியான இந்நிலைபாடு, வருணுக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் நடவடிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா: பணவீக்கம் மிகவும் குறைந்தது.

இந்தியாவின் வணிகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் அது வெறும் 0.44 சதவீதம் என்று இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 7.78 சதவீதமாக இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பண வீக்கம் வெகுவாகக் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது.

உணவுப்பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி, மேலும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி கருத்தளிக்கையில் விரைவில் பணவீக்கம் 0% என்ற நிலையை அடையும் என்கின்றனர்.

காங்கிரஸ் 170 தொகுதிகளில் வெல்லும் - கருத்துக்கணிப்பு

பதினைந்தாவது மக்களவையைத் தீர்மானிக்க நடத்தப்படும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அரசு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 170 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு அதிக இடங்கள் கிடைக்குமென்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவில் 17 இடங்களிலும், மே. வங்கத்தில் காங்கிரஸ் - திரிணாமூல் கூட்டணிக்கு 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில் குஜராத், மராட்டியம், கர்நாடகாவில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களே கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 30 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சமாஜ்வாடி கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் அதனுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தற்போது காங்கிரசில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், மராட்டியத்திலும், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி உத்தரபிரதேசத்திலும் குறைந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பும் உள்ளது.

பாரதிய ஜனதாவின் செல்வாக்கு நாளுக்குநாள் சரிந்து வருவதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதற்கு அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல்களே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் சங்கிலித்தொடர் உணவகங்களின் உரிமையாளர் ராஜகோபால். அண்ணாச்சி என்று அழைக்கப்படுபவர். தன்னிடம் பணிபுரிந்த சென்னை வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதற்காக வழக்கு விசாரணை நடந்து கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்மு‌றையீடு செய்திருந்தார். அந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பானுமதி, மிஸ்ரா அடங்கிய குழுமம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ளது.

தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மூன்றாம் டெஸ்ட் போட்டி

தென் ஆப்ரிக்காவில் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பந்தடிக்க தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவின் அபாரமான பந்து வீச்சால் 8 விக்கெட்களை இழந்து 205 எடுத்து இருந்தது. அணித்தலைவர், ரிக்கி பான்டிங் மற்றும் உதவி தலைவர் கிளார்க் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி உலக சாதனை புரிந்தனர்.

நியுஜிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா நிதானமான தொடக்கம்.

நியுஜிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை குவித்தது. சச்சின் அபாரமாக ஆடி 70 ரன்களுடனும், யுவராஜ்சிங் 8 ரனகளுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக முதலில் ஆடிய நியுஜிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 279 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தடுமாறிய நியுஜிலாந்து, அணித்தலைவர் வெட்டொரி மற்றும் புதுபுக வீரர் ரைடர் அபாரமான ஆட்டத்தால் 279 ரன்களை எடுத்தது. இருவரும் சதங்களை அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.

முன்னாள் இஸ்ரேலிய அதிபர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றம் அறிவிப்பு


டெல் அவிவ்: முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே கட்சவ் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்நாட்டு அரசு மற்றும் நீதிமன்றம் அவருடன் பதவி விலகுவதற்கு பதிலாக சிறை தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதாக செய்து கொண்ட உடன்படிக்கையை ரத்து செய்துள்ளது.


63 வயது இஸ்ரேலிய அதிபர் தன்னுடன் பணியாற்றி வந்த அலுவலரை கற்பழித்ததாகவும் மற்றும் இரண்டு பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

கட்சவ் தான் மத்திய கிழக்கு பகுதியை சார்ந்தவன் என்பதால் தன்னை சிலர் குறி வைத்து தாக்குவதாக புகார் கூறியிருந்தார்.

அப்பெண்கள் கட்சவ் அதிபராக கடந்த 2007 வரை இருந்த காலத்தில் அவருடன் பனி செய்து வந்தார்கள்.

1998 ல் கட்சவ் ஒரு பெண்ணை தரையில் தள்ளி விட்டு அப்பெண்ணின் பேன்டை உருவி கற்பழித்தார். இரண்டாவதாக அவர் அப்பெண்ணை ஜெருசலேம் ஹோட்டல் ஒன்றுக்கு அலுவல் காரணமாக வரக்கட்டலையிட்டுஅங்கிருந்த அறையில் கற்பழித்தார்.கட்சவ் கோபமுற்ற அப்பெண்ணிடம் நீ நல்ல சுகத்தை அனுபவி என்று கூறி அமைதியாக்கினார்.

௨௦௦௫ ல் அவருடைய 60 வது பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த பெண்ணிடம் பலாத்காரமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின் காரணமாக முன்னதாகவே அவர் பதவி விலகினார்.

நன்றி AP.

9 ஆண்டுகளாக தன் மகளையே வன்புணர்ந்து வந்ததாக தந்தை கைது!

கடந்த 9 ஆண்டுகளாக தன்னுடைய மகளையே வன்புணர்ந்து வந்ததாக 60 வயதுடைய தொழில் அதிபர் ஒருவரை மும்பை மீரா சாலை காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று கைது செய்துள்ளனர். தற்போது 21 வயதாகும் அந்த மகள், தன்னைத் தொடர்ந்து 15 வயதான தன் சகோதரியையும் வன்புணர்ந்ததை அறிந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்தப் பெண்களின் தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மந்திரவாதி 2000ஆம் ஆண்டு இந்த தொழில் அதிபர் குடும்பத்திடம், 12 வயதான தன் மகளிடம் தந்தை உடலுறவு கொண்டால் குடும்பத்தின் எதிர்காலம் செழிக்கும், வருமானம் பெருகும் என்று கூறியதை அடுத்து அவர் இச் செயலில் ஈடுபட்டு வந்ததாக மீரா ரோடு காவல் துறையினர் கூறினர். தொடர்ந்து அந்த மந்திரவாதியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் (பெயரை காவல்துறை வெளியிடவில்லை), மீரா - பையாந்தர் சாலையில் உள்ள கோல்டன் நெஸ்ட் வளாகத்தின் பகுதி 1ல் வசித்து வந்ததாகவும், தொழில் அதிபர் அந்தேரியில் வாகனங்களுக்குப் பொருத்தப்படும் ரேடியம் பிளேட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மந்திரவாதி ரத்தோடுடன் இக்குடும்பத்தினருக்கு 20 ஆண்டுகால பழக்கம் உண்டு என்று கூறிய காவல் துறையினர், தன்னுடைய மூத்த மகளை நீண்ட காலம் அவளுடைய தாயின் முன்னிலையிலேயே வன்புணர்ந்ததாகக் கூறி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜோஸ் பிரிட்ஸல் என்பவர் தன்னுடைய மகளை 24 ஆண்டுகளாகப் பூட்டி வைத்து வன்புணர்ந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து கொண்டுள்ளது. மும்பை நிகழ்வும் ஆஸ்திரேலிய நிகழ்வை ஒத்ததாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பீகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் இணைந்து பீகாரில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அறிவித்தன. அப்போது காங்கிரசுக்கு இரு கட்சிகளும் மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருந்தன. இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி பீகாரில் 26 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடப் போவதாக புதன் கிழமை இரவு அறிவித்தது.

உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இதனைத் தெரிவித்தார். மேலும் உத்திரப் பிரதேசத்திலும் ஏற்கனவே அறிவித்திருந்த 24 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உயர்நீதி மன்ற கலவரம் : காவல் அதிகாரிகள் இடைநீக்கம்!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி வழக்கறிஞர்கள் - காவலர்கள் இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை இடை நீக்கம் செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் பணித்துள்ளது.

மன்னிப்புக் கேட்கப் போவதில்லை - வருண்!

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தலைவர்களும் வருணின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று வருண் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தான் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் தாம் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூக அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக இவர் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை உத்தரவிட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியிடம் இவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு அக்கட்சிக்கும் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

நான் என்னுடைய நம்பிக்கையில் பெருமிதம் அடைகிறேன். இதற்காக எவரிடமும் மன்னிப்புக் கோரப் போவதில்லை. நான் காந்தி, இந்து, இந்தியன். அரசியல் காழ்ப்புணர்வில் நான் பலியாக்கப் பட்டுள்ளேன். நான் பேசியதாக ஒலிபரப்பானவை என் பேச்சுக்கள் அல்ல. அது என் குரலும் அல்ல. சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணம் நான் எதுவும் பேசவில்லை என்றும் வருண் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அலிபுர்துவார் நகரில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் பலியானார். மேலும் 12 பேர் காயமுற்றுள்ளனர்.

நகரின் செளபதி என்ற பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே இந்த சைக்கிள் குண்டு வெத்ததாக மேற்கு வங்க வடக்குப் பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் கூறினார். இந்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என்றும் அதன் தன்மை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இது உல்பா இயக்கத்தினரின் செயலாக இருக்குமா? என்ற கேள்விக்கு உல்பா இயக்கத்தினர் இங்கு ஏன் வருகின்றனர் என கேள்வி எழுப்பினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!