Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 09, 2025

இந்தியா: பணவீக்கம் மிகவும் குறைந்தது.

இந்தியாவின் வணிகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில் அது வெறும் 0.44 சதவீதம் என்று இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒரே வாரத்தில் 1.99 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 7.78 சதவீதமாக இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பண வீக்கம் வெகுவாகக் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது.உணவுப்பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் சில...

காங்கிரஸ் 170 தொகுதிகளில் வெல்லும் -

பதினைந்தாவது மக்களவையைத் தீர்மானிக்க நடத்தப்படும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு என்று பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன. அரசு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 170 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான...

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் சங்கிலித்தொடர் உணவகங்களின் உரிமையாளர் ராஜகோபால். அண்ணாச்சி என்று அழைக்கப்படுபவர். தன்னிடம் பணிபுரிந்த சென்னை வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதற்காக வழக்கு விசாரணை நடந்து கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து...

தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மூன்றாம் டெஸ்ட்

தென் ஆப்ரிக்காவில் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பந்தடிக்க தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவின் அபாரமான பந்து வீச்சால் 8 விக்கெட்களை இழந்து 205 எடுத்து இருந்தது. அணித்தலைவர், ரிக்கி பான்டிங் மற்றும் உதவி தலைவர் கிளார்க் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி உலக சாதனை புரிந்தனர். ...

நியுஜிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா நிதானமான தொடக்கம்.

நியுஜிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை குவித்தது. சச்சின் அபாரமாக ஆடி 70 ரன்களுடனும், யுவராஜ்சிங் 8 ரனகளுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக முதலில் ஆடிய நியுஜிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 279 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 60...

முன்னாள் இஸ்ரேலிய அதிபர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றம்

டெல் அவிவ்: முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே கட்சவ் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்நாட்டு அரசு மற்றும் நீதிமன்றம் அவருடன் பதவி விலகுவதற்கு பதிலாக சிறை தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதாக செய்து கொண்ட உடன்படிக்கையை ரத்து செய்துள்ளது.63 வயது இஸ்ரேலிய அதிபர் தன்னுடன் பணியாற்றி வந்த அலுவலரை கற்பழித்ததாகவும் மற்றும் இரண்டு பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம்...

9 ஆண்டுகளாக தன் மகளையே வன்புணர்ந்து வந்ததாக தந்தை கைது!

கடந்த 9 ஆண்டுகளாக தன்னுடைய மகளையே வன்புணர்ந்து வந்ததாக 60 வயதுடைய தொழில் அதிபர் ஒருவரை மும்பை மீரா சாலை காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று கைது செய்துள்ளனர். தற்போது 21 வயதாகும் அந்த மகள், தன்னைத் தொடர்ந்து 15 வயதான தன் சகோதரியையும் வன்புணர்ந்ததை அறிந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்தப் பெண்களின் தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஹஸ்முக் ரத்தோட் என்ற மந்திரவாதி 2000ஆம் ஆண்டு...

பீகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் இணைந்து பீகாரில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அறிவித்தன. அப்போது காங்கிரசுக்கு இரு கட்சிகளும் மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியிருந்தன. இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி பீகாரில் 26 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் போட்டியிடப் போவதாக புதன் கிழமை இரவு அறிவித்தது.உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் சுஷில் குமார்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!