Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 29, 2025

9 ஆண்டுகளாக தன் மகளையே வன்புணர்ந்து வந்ததாக தந்தை கைது!

Published on வியாழன், 19 மார்ச், 2009 3/19/2009 10:06:00 AM // , , , , , ,

கடந்த 9 ஆண்டுகளாக தன்னுடைய மகளையே வன்புணர்ந்து வந்ததாக 60 வயதுடைய தொழில் அதிபர் ஒருவரை மும்பை மீரா சாலை காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று கைது செய்துள்ளனர். தற்போது 21 வயதாகும் அந்த மகள், தன்னைத் தொடர்ந்து 15 வயதான தன் சகோதரியையும் வன்புணர்ந்ததை அறிந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இந்தப் பெண்களின் தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மந்திரவாதி 2000ஆம் ஆண்டு இந்த தொழில் அதிபர் குடும்பத்திடம், 12 வயதான தன் மகளிடம் தந்தை உடலுறவு கொண்டால் குடும்பத்தின் எதிர்காலம் செழிக்கும், வருமானம் பெருகும் என்று கூறியதை அடுத்து அவர் இச் செயலில் ஈடுபட்டு வந்ததாக மீரா ரோடு காவல் துறையினர் கூறினர். தொடர்ந்து அந்த மந்திரவாதியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் (பெயரை காவல்துறை வெளியிடவில்லை), மீரா - பையாந்தர் சாலையில் உள்ள கோல்டன் நெஸ்ட் வளாகத்தின் பகுதி 1ல் வசித்து வந்ததாகவும், தொழில் அதிபர் அந்தேரியில் வாகனங்களுக்குப் பொருத்தப்படும் ரேடியம் பிளேட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மந்திரவாதி ரத்தோடுடன் இக்குடும்பத்தினருக்கு 20 ஆண்டுகால பழக்கம் உண்டு என்று கூறிய காவல் துறையினர், தன்னுடைய மூத்த மகளை நீண்ட காலம் அவளுடைய தாயின் முன்னிலையிலேயே வன்புணர்ந்ததாகக் கூறி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜோஸ் பிரிட்ஸல் என்பவர் தன்னுடைய மகளை 24 ஆண்டுகளாகப் பூட்டி வைத்து வன்புணர்ந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து கொண்டுள்ளது. மும்பை நிகழ்வும் ஆஸ்திரேலிய நிகழ்வை ஒத்ததாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!