Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முன்னாள் இஸ்ரேலிய அதிபர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றம் அறிவிப்பு

Published on வியாழன், 19 மார்ச், 2009 3/19/2009 08:06:00 PM // , , , ,


டெல் அவிவ்: முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே கட்சவ் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாழி என்று அந்நாட்டு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்நாட்டு அரசு மற்றும் நீதிமன்றம் அவருடன் பதவி விலகுவதற்கு பதிலாக சிறை தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதாக செய்து கொண்ட உடன்படிக்கையை ரத்து செய்துள்ளது.


63 வயது இஸ்ரேலிய அதிபர் தன்னுடன் பணியாற்றி வந்த அலுவலரை கற்பழித்ததாகவும் மற்றும் இரண்டு பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

கட்சவ் தான் மத்திய கிழக்கு பகுதியை சார்ந்தவன் என்பதால் தன்னை சிலர் குறி வைத்து தாக்குவதாக புகார் கூறியிருந்தார்.

அப்பெண்கள் கட்சவ் அதிபராக கடந்த 2007 வரை இருந்த காலத்தில் அவருடன் பனி செய்து வந்தார்கள்.

1998 ல் கட்சவ் ஒரு பெண்ணை தரையில் தள்ளி விட்டு அப்பெண்ணின் பேன்டை உருவி கற்பழித்தார். இரண்டாவதாக அவர் அப்பெண்ணை ஜெருசலேம் ஹோட்டல் ஒன்றுக்கு அலுவல் காரணமாக வரக்கட்டலையிட்டுஅங்கிருந்த அறையில் கற்பழித்தார்.கட்சவ் கோபமுற்ற அப்பெண்ணிடம் நீ நல்ல சுகத்தை அனுபவி என்று கூறி அமைதியாக்கினார்.

௨௦௦௫ ல் அவருடைய 60 வது பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த பெண்ணிடம் பலாத்காரமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின் காரணமாக முன்னதாகவே அவர் பதவி விலகினார்.

நன்றி AP.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!