Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 08, 2025

தமிழகம்: பிஜேபியுடன் சரத்குமார், கார்த்திக்

தமிழ்நாட்டில் பாஜகவுடன் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. விஜயகாந்தின் தேமுதிக வை தனது அணியில் சேர்க்க பாஜக எடுத்து வரும் முயற்சிக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக் தலைமையில் இயங்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி போன்றவற்றுடன் பாஜக கூட்டணி சேர முயற்சி நடந்ததாகவும் இதற்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள்...

கடலோரப்பாதுகாப்பு: அமெரிக்கவிமானம் வாங்குகிறது

மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை முன்னிட்டு கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அரசு முடிவு செய்திருந்தது.இதற்காக நவீன ரோந்து விமானங்களையும், கப்பல்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவின் 'போயிங்கோ பி-81' விமானத்தை வாங்க முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்க நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மொத்தம் 8 விமானங்களை வாங்குகிறது. இவற்றின் மொத்த விலை ரூ. 10 ஆயிரம் கோடி. இதே...

'மூன்றாவது அணியில் சேர மாட்டோம்' -

மூன்றாவது அணியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் வெளியேறினாலும் சமாஜ்வாதி கட்சி இணைய வாய்ப்பில்லை என்று சமாஜ் வாதி பொதுச்செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.அமர்சிங் நிருபர்களின் கேள்விக்குயொன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தனிப்பட்ட மற்றும் அரசியல் வேறுபாடு அறிந்தவர். அவர் பொதுச் செயலராக இருந்திருந்தால், மூன்றாவது முன்னணியில் சேர்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும்" என்றார் அமர்சிங். "ஆனால்,பிரகாஷ் காரத்தின்...

வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து பேசிய பாஜகவின் ஃபிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. மட்டுமின்றி, குற்ற வழக்கும் அவருக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது.பேச்சு குறித்த ஒலிநாடாக்களைக் கோரியுள்ள தேர்தல் ஆணையம், வரும் செவ்வாயன்று இப்பிரசினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் "தெளிவாக,இப்பேச்சுகள் சட்ட மீறலாகும்" என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், தான் சமூக வெறுப்புணர்வைத் தூண்டுமாறு பேசவில்லை என்றும், அவை...

மத உணர்வுகளைப் புண்படுத்துவது கட்சியின் கலாச்சாரம் இல்லை - பா.ஜ.க.

மத உணர்வுகளைப் புண்படுத்துவது பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரம் இல்லை என்றும், தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் பேசிய பேச்சின் விளைவால் எழுந்துள்ள விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும்...

ராஷ்டிரிய ஜனதா தளம் - லோக் ஜன சக்தி தொகுதி

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும் லோக்ஜனசக்தி கட்சிக்கும் இடைய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா கட்சி 25 தொகுதிகளிலும், லோக்ஜனசக்தி கட்சி 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்றார். மேலும் பேசிய அவர் பாஜக தலைமையிலான கூட்டணியை...

கட்சிக்கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார்

பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தை மீண்டும் புறக்கணித்தார் அருண்ஜெட்லி. இன்று பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் டில்லியில் கூடி ஆந்திரா, குஜராத், டில்லி மற்றும் உ.பி., மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ராஜ்நாத்சிங் தலைமையில் ந‌டந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தை அருண்ஜெட்லி புறக்கணித்தார். மார்ச் 13ம் தேதி நடந்த கூட்டத்தையும் ஜெட்லி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்‌தக்கது.பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும் அருண்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!