Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

'மூன்றாவது அணியில் சேர மாட்டோம்' - சமாஜ்வாதி

Published on செவ்வாய், 17 மார்ச், 2009 3/17/2009 06:03:00 PM // , , , , ,

மூன்றாவது அணியில் இருந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் வெளியேறினாலும் சமாஜ்வாதி கட்சி இணைய வாய்ப்பில்லை என்று சமாஜ் வாதி பொதுச்செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

அமர்சிங் நிருபர்களின் கேள்விக்குயொன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தனிப்பட்ட மற்றும் அரசியல் வேறுபாடு அறிந்தவர். அவர் பொதுச் செயலராக இருந்திருந்தால், மூன்றாவது முன்னணியில் சேர்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும்" என்றார் அமர்சிங். "ஆனால்,பிரகாஷ் காரத்தின் ஆதிக்கத்தின் கீழ் மூன்றாவது அணியில் சேர விரும்பவில்லை"

"காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னையால் கூட்டணி ஏற்படவில்லை என்றாலும், அக்கட்சியுடன் சில கொள்கை உடன்பாடு நிலவுகிறது.அத்வானி, மாயாவதி மன்மோகன் சிங் என்று பார்த்தால், பிரதமருக்கான சிறந்த தேர்வாக மன்மோகன் சிங்கையே கருதுகிறோம்" - இவ்வாறு அமர்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!