Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Thursday, April 24, 2025

வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம்

Published on செவ்வாய், 17 மார்ச், 2009 3/17/2009 02:31:00 PM // , , , , , ,

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து பேசிய பாஜகவின் ஃபிலிபிட் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் வருண்காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. மட்டுமின்றி, குற்ற வழக்கும் அவருக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது.

பேச்சு குறித்த ஒலிநாடாக்களைக் கோரியுள்ள தேர்தல் ஆணையம், வரும் செவ்வாயன்று இப்பிரசினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் "தெளிவாக,இப்பேச்சுகள் சட்ட மீறலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தான் சமூக வெறுப்புணர்வைத் தூண்டுமாறு பேசவில்லை என்றும், அவை திரிக்கப்பட்டுள்ளதாகவும் வருண்காந்தி தெரிவித்துள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!