Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on: புதன், 18 பிப்ரவரி, 2009 // , , ,
மணிப்பூரில் நடந்து வரும் முழு அடைப்பினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. 50க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

அரசு அதிகாரியும் அவருடன் பணியாற்றி இரு அதிகாரிகளும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரில் 48 மணி நேர முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு உள்ளூர் அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பில் ஈடுபட்டவர்கள் சகோல்பந்த், கக்வா, யும்னாம் மற்றும் லீகய் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கைளச் சேதப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மணிப்பூர் முழுவதும் கடைகள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களிலும் மிகக் குறைவான அளவிலேயே வருகை இருந்தது. மாநிலத்திற்குள்ளும் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஓடவில்லை. தலைநகர் இம்பாலில் பல்வேறு சாலைகளிலும் டயர்கள் கொழுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வன்னிப் பகுதியில் 108 பேர் படுகொலை


வன்னி பகுதியில் இன்று அதிகாலை இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் 108க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய ஊர்களைக் கொண்ட பாதுகாப்புப் பகுதி என்று புதிதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடித்த இந்த தாக்குதலின்போது கொத்து குண்டுகள் உபயோகிக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை

தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அதனை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிகளின் படி வெளியிடப்பட்டுள்ள உத்தரவு மூலம் தேர்தல் ஒரே நாளில் நடந்தால் தேர்தல் முடிந்த 48 மணி நேரம் வரையும், பல கட்டங்களாக நடந்தால் இறுதிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும். அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கருத்துக் கணிப்பு வெளியட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி இருந்தது.

20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும்

11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இவ்வாறு கூறியுள்ளார்.

அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. தீவிவாதிகளின் தாக்குதலை முறியடித்தல் மற்றும் அவசர கால காட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மையங்களில் அந்தந்த மாநில காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஹரியானா முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் - 2வது மனைவி

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார்.

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் சாந்து முகம்மது அவரது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார். அவர் மீது காவல்துறையில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறினார்.

தான் கற்பழிக்கபட்டதாகவும், ஏமாற்றப்பட்டதாகவும், தன்னுடை மத உணர்வு புண்படுத்தப்பட்டதாகவும் பிஜா திங்கள் கிழமையன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சாந்து முகம்மது மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இஸ்லாமிய மதத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதா பாலி என்ற பிஜா உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசு துணை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சாந்து முகம்மது என்ற சந்தர் மோகன் ஹரியானா மாநில துணை முதல்வராக இருந்தவர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!