Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியது

Published on: புதன், 21 ஜனவரி, 2009 // ,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்களுக்கு மேல் தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தி கடந்த 18ஆம் தேதி நள்ளிவில் தன்னிச்சையாக தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. இராணுவத்தினர் காஸாவிலேயே இருப்பார்கள் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவத்தினரை எதிர்த்து சன்டையிட்டு வந்த ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களும் சன்டை நிறுத்தத்தை அறிவித்து, ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்திருந்தன.

செவ்வாய்க் கிழமையிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் கூறின. இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலின் அனைத்து இராணுவத்தினரும் காஸாவிலிருந்து வெளியேறிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இதனை தங்களின் வெற்றி என்று கூறுகின்றன. காஸாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெற்றி குறித்து கேட்டபோது, சன்டையில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் எல்லாற்றையும் இழந்துவிட்டோம் என்று கூறினார்.

இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 1340 பேர் கொல்லப்பட்டனர். 5320 பேர் காயமுற்றனர். இதில் குறைந்த 1100 பேர் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் மூவர் பொதுமக்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் 80 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது - அந்தோணி

Published on: //
இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது என்றும் நம்முடைய பாதுகாப்பு வசதிகளை நவீனப்படுத்த வேண்டும் என்றும் இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார். 

இந்திய கடல் பாதுகாப்புக்காக அதிவேக கப்பலான சாம்ராட் என்னும் கப்பலை பணியமர்த்தும் நிகழ்வு இன்று நடந்தது. அப்போது பேசும்போது, நம்மிடம் இருக்கும் வசதிகள் போதுமானது இல்லை. நமக்குத் தேவையானதில் 30 சதவீதம் மட்டுமே நம்மிடம் உள்ளன. இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால் இந்திய கடல் பாதுகாப்பை அரசு நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். நம்முடைய இராணுவம் எந்நேரமும் செயல்படத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இராணுவத் தளவாட உற்பத்தி துறையின் இணை அமைச்சர், இந்திய கப்பல்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒபாமாவுக்கு மெர்கெல் காட்டமான வரவேற்பு!

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் வேளையில் ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்கெல் காட்டம் கலந்த தொனியில் வரவேற்பு அளித்துள்ளார்.

ஒபாமா தனது பதவியேற்புக்கு முன்பான உரையின் போது ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவது தான் தனது முதல் முனைப்பாக இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதற்குத் துணையாக இருக்கும் நாடுகளும் அதற்காக உதவவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் முகமாக ஜெர்மனி அதிபர் மெர்கெல், "ஆப்கானிஸ்தானில் எங்கள் (ஜெர்மனியின்) கடமை என்ன என்று எங்களுக்குத் தெரியும்; இது நாள் வரை ஆப்கனில் நாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை மிகச் சரியாகவே செய்து வந்துள்ளோம். இதைச் சொல்ல புதிய அதிபர் தேவையில்லை"என்று காட்டமாகக் கூறினார்.

ஒபாமா அமெரிக்க அதிபரானதற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதே செய்தியிலேயே இதைக் குறிப்பிட்ட அதிபர், "ஜெர்மனியின் வீரர்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிப்பதும் குறைப்பதும் அமெரிக்க அதிபராக யார் வருகிறார் என்பதைப் பொறுத்ததில்லை" என்றும் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!