Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியது

Published on புதன், 21 ஜனவரி, 2009 1/21/2009 05:57:00 PM // ,

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்களுக்கு மேல் தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தி கடந்த 18ஆம் தேதி நள்ளிவில் தன்னிச்சையாக தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. இராணுவத்தினர் காஸாவிலேயே இருப்பார்கள் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவத்தினரை எதிர்த்து சன்டையிட்டு வந்த ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களும் சன்டை நிறுத்தத்தை அறிவித்து, ஒரு வாரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்திருந்தன.

செவ்வாய்க் கிழமையிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் காஸாவை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் கூறின. இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலின் அனைத்து இராணுவத்தினரும் காஸாவிலிருந்து வெளியேறிவிட்டதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இதனை தங்களின் வெற்றி என்று கூறுகின்றன. காஸாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெற்றி குறித்து கேட்டபோது, சன்டையில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் எல்லாற்றையும் இழந்துவிட்டோம் என்று கூறினார்.

இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 1340 பேர் கொல்லப்பட்டனர். 5320 பேர் காயமுற்றனர். இதில் குறைந்த 1100 பேர் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் மூவர் பொதுமக்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் 80 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!