Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

15 ரூபாய்க்காக தாயைக் கொன்ற

Published on: புதன், 14 ஜனவரி, 2009 //

குடிப்பழக்கம் உள்ள பக்குராம் தன்னிடம் குடிப்பதற்குப் பணம் இல்லாததால் தாயிடம் 15 ரூபாய் கேட்டான். மகன் குடிப்பதை விரும்பாத தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டாள். இதனால் கோபமடைந்த மகன் 58 வயதான ஹிர்மத் பாய் என்ற தன்னைப் பெற்ற தாயையே கொலை செய்துவிட்டான்.சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தின் கயா எனும் கிராமத்தில் கடந்த திங்கள் கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.பக்குராம் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், கொலை செய்யும்போது...

லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட்

லெபனான் மீது இஸ்ரேல் 17 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக லெபனானின் எல்லையிலிருந்து 4 ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லையில் வந்து வீழ்ந்ததாகவும் அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலைத் தொடுத்தது எனவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது கடந்த 19 நாட்களாக இஸ்ரேல் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில் நடக்கும் இரண்டாவது முறையாக இச்சம்பவம்...

ஐ.நா. செயலாளர் எகிப்து

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுவிட்டதாகவும், 4500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சன்டையை நிறுத்த வேண்டும்...

மும்பை சம்பவம் - பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பில்லை :

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்டது என்று இந்திய அரசு கூறி வரும் நிலையில் அதனை பிரிட்டன் மறுத்துள்ளது."மும்பை தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்டதல்ல என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தேன். அதனை மீண்டும் கூறுவது அவசியமானது என்று நான் நம்புகிறேன்" என்று பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் நேற்று கூறினார்.தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உபயோகித்த சாட்டிலைட் போன்...

போலி விமான

அமெரிக்காவைச் சேர்ந்த மார்கஸ் ஷ்ரன்கர் (வயது 38) என்ற விமான ஓட்டி பல்வேறு நிதி மோசடி வழக்குகளில் சிக்குண்டு காவலர்களால் தேடப்பட்டு வந்தார். இந்த வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக இவர் போலியாக விமான விபத்து சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.ஞாயிற்றுக் கிழமை இன்டியானா மாநிலம் ஆன்டர்சன் நகரிலிருந்து ப்ளோரிடாவுக்கு விமானத்தில் பறந்தார். அலபாமா மாநில எல்லையில் இருக்கும் போது விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு போலியாக அவசர அழைப்பு விடுத்து தனது...

வட இந்தியாவில் குளிருக்கு 100 பேர்

Published on: //

இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. குளிரின் காரணமாக இதுவரை சுமார் 100 பேர் இறந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குளிர் மட்டுமல்லாது கடும் பனியும் பொழிவதால் சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. பல இரயில்கள் தாமதமாக புறப்பட்டன.ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிர்தசரசில் 3.1 டிகிரி செல்சியஸாக...

இந்தியா ஆதாரங்கள் வழங்கவில்லை - பாகிஸ்தான்!

Published on: //

மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் குறித்த ஆதாரங்களை இந்தியா வழங்கவில்லை என பாகிஸ்தான் அதிபர் கிலானி தெரிவித்துள்ளார்."இந்தியா வழங்கியவை ஆதாரங்கள் அல்ல எனவும் ஆதாரங்கள் என்ற பெயரில் சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளனர் எனவும்" கிலானி தெரிவித்தார். ...

மும்பை தீவிரவாதத் தாக்குதல் - முக்கிய சாட்சி மாயம்!

Published on: //

கடந்த நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை நேரடியாக கண்ணால் கண்ட 47 வயதுடைய அனிதா ராஜேந்திர உதயா என்ற முக்கிய சாட்சியைக் காணவில்லை. இவர் எங்கு சென்றார் என்பதைக் குறித்து குடும்பத்தினருக்கோ காவல்துறைக்கோ எவ்விதத் தகவலும் தெரியவில்லை.தாக்குதல் நடந்த நாளில் மீன்பிடி படகில் அமர்ந்திருந்த இவர், கப் பரேடிலுள்ள பத்வர் பார்க்கில் படகில் வந்திறங்கிய 6 தீவிரவாதிகளைப் பார்ந்திருந்தார். தாக்குதலுக்குப்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!