Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மும்பை தீவிரவாதத் தாக்குதல் - முக்கிய சாட்சி மாயம்!

Published on புதன், 14 ஜனவரி, 2009 1/14/2009 12:21:00 AM //

கடந்த நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை நேரடியாக கண்ணால் கண்ட 47 வயதுடைய அனிதா ராஜேந்திர உதயா என்ற முக்கிய சாட்சியைக் காணவில்லை. இவர் எங்கு சென்றார் என்பதைக் குறித்து குடும்பத்தினருக்கோ காவல்துறைக்கோ எவ்விதத் தகவலும் தெரியவில்லை.

தாக்குதல் நடந்த நாளில் மீன்பிடி படகில் அமர்ந்திருந்த இவர், கப் பரேடிலுள்ள பத்வர் பார்க்கில் படகில் வந்திறங்கிய 6 தீவிரவாதிகளைப் பார்ந்திருந்தார். தாக்குதலுக்குப் பின்னர் ஜெ.ஜெ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இந்த 6 பேரின் உடல்களை இவர் அடையாளம் கண்டிருந்தார்.

இதற்குப் பின்னர் அனிதாவிற்கு மிகுந்த பயம் இருந்ததாக மகள் சீமா கேதல் ஜோஷி கூறினார். சீமா தெரிவித்தப் புகாரின் அடிப்படையில் கப் பரேட் காவல்துறை விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!