Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

மும்பை சம்பவம் - பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பில்லை :

Published on புதன், 14 ஜனவரி, 2009 1/14/2009 12:48:00 PM // ,

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை உதவியுடன் நடத்தப்பட்டது என்று இந்திய அரசு கூறி வரும் நிலையில் அதனை பிரிட்டன் மறுத்துள்ளது.


"மும்பை தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்டதல்ல என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தேன். அதனை மீண்டும் கூறுவது அவசியமானது என்று நான் நம்புகிறேன்" என்று பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் நேற்று கூறினார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உபயோகித்த சாட்டிலைட் போன் தகவல்கள் மற்றும் உயிருடன் பிடிபட்டுள்ள கசாப்பின் வாக்கு மூலம் ஆகியவற்றை இந்தியா பாகிஸ்தான் அரசிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தது.

இவற்றை ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், இவை வெறும் தகவல்கள்தான் எனவும் பாகிஸ்தானின் பிரதமர் கூறியுள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!