Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Thursday, April 10, 2025

வட இந்தியாவில் குளிருக்கு 100 பேர்

Published on புதன், 14 ஜனவரி, 2009 1/14/2009 01:58:00 AM //

இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. குளிரின் காரணமாக இதுவரை சுமார் 100 பேர் இறந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குளிர் மட்டுமல்லாது கடும் பனியும் பொழிவதால் சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. பல இரயில்கள் தாமதமாக புறப்பட்டன.


ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 3 டிகிரி அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமிர்தசரசில் 3.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. நேற்று காலையில் டில்லியில் கடும் குளிராக இருந்தது. டில்லியின் வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. வழக்கமான சராசரி அளவை விட இது குறைவாகும்.

உத்திரப் பிரதேசத்தில் குளிரின் காரணமாக நேற்று 4 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இம்மாநிலத்தின் முஜப்பர்நகர் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 பேர் குளிரின் காரணமாக இறந்துள்ளனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!