Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 11, 2025

ஐ.நா. செயலாளர் எகிப்து

Published on புதன், 14 ஜனவரி, 2009 1/14/2009 01:12:00 PM // , ,

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுவிட்டதாகவும், 4500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சன்டையை நிறுத்த வேண்டும் என்று இரு தரப்பினரையும் வலியுறுத்தினார். இஸ்ரேல் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் 19ஆவது நாளாகத் தாக்குதலை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சற்று முன் வந்து சேர்ந்தார். இங்கு எகிப்து அதிபர் முபாரக்குடன் பேச்சு வார்ததை நடத்துகிறார். அதன் பின்னர் இஸ்ரேல், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களை அவர் சந்திக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!