Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

இலங்கைத் தமிழர் பிரச்சனை: மேலும் ஒருவர்

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 07:42:00 PM // , , , , , , , ,


இலங்கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ராஜா என்பவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். காவலர்கள் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.


சென்னையில் முத்துகுமார், பள்ளப் பட்டி அருகே ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் இவர்களைத் தொடர்ந்து மலேசியாவில் ராஜா என இதுவரை நான்கு பேர் தங்களைத் தாங்களே எரியூட்டிக் கொண்டு மடிந்துள்ளனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!