Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

பாகிஸ்தானுடன் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் : பா.ஜ.க.

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 06:39:00 PM // , , , , , , ,

பாகிஸ்தானுடன் உள்ள அனைத்துவகை உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தேசியய ஆலோசனைக் கூட்டம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் உயர்மட்டத் தலைவர் அருன் ஜெட்லி, கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்றத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் அவர்கள் மீதான வழக்குகள் இந்தியாவில்தான் நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.

பாகிஸ்தானுடன் உள்ள வணிக, கலாச்சார, சுற்றுலா மற்றும் போக்குவரத்து உட்பட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். பாகிஸ்தானுடன் காங்கிரஸ் மேற்கொள்ளும் மென்மையான போக்கை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!