Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹரியானா முன்னாள் முதல்வரின் மனைவி கைது

Published on சனி, 31 ஜனவரி, 2009 1/31/2009 10:30:00 AM // , , ,

ஹரியாணா முன்னாள் முதல்வரின் இரண்டாவது மனைவி தன்னுடைய கணவர் கடத்தப்பட்டதாக புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை முன்னாள் முதல்வர் மறுத்ததும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.


தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தான் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் சக்திவாய்ந்த தூக்க மாத்திரை உட்கொண்டதால்தான் இந்நிலை ஏற்பட்டதாகவும் கூறிய பிஜா, சாந்து முகம்மது பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார். இல்லையெனில் தன்னைப் பார்க்க மருத்துவமனை வந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

ஹரியாணாவின் முன்னாள் முதல்வர் சந்தர் மோகன் என்ற சாந்து முகம்மது அனுராதா பாலி என்ற பிஜாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காகவே இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் மதத்துக்கு மாறினர் என்பது குறிப்பிட்த் தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!