Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பா.ஜ.க.வை ஆதரிக்க சிவ சேனை நிபந்தனை

பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலை தெளிவாக அறிவிக்கப் பட்டதால்தான் அத்வாணி பிரமாராக சிவசேனை ஆதரவளிக்கும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.


கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் மராட்டியர் அதிகமாக வாழும் பகுதியாகும். நீண்ட நாட்களாகவே கர்நாடகாவுக்கும் மகாரஷ்டிராவுக்கும் இது குறித்து பிரச்சனை இருந்து வருகிறது. பெல்காம் மாவட்டத்தை இழக்க விரும்பாத கர்நாடகா பெல்காமை தனது இரண்டாவது தலைநகரம் என்றறிவித்து அங்கு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராகத் தங்களது ஆதரவு வேண்டுமேனில் பெல்காம் குறித்த பாரதீய ஜனதா கட்சியின் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனை நிபந்தனை விதித்துள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவர்களில் ஒருவருமான மனோகர் ஜோஷி இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மற்றும் அத்வானி ஆகியோரை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்தாலும் பெல்காம் பகுதியில் உள்ள மராட்டி மொழியினர் மிகவும் கஷ்டப் படுகின்றனர் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!