Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தாய்லாந்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு

Published on: ஞாயிறு, 22 மார்ச், 2009 // ,
ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளினால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்கிறது. முன்னாள் பிரதமர், தக்ஸின் சினவத்ரா, நாட்டை விட்டு வெளியேறினாலும், அவருடைய கட்சிக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் விமான நிலைய முற்றுகை என பல்வேறு போராட்டங்களை அரசுக்கெதிராக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியான, பேங்காக், பயணிகளின் வருகை குறைவால், வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கிடையே, அந்நாட்டின் ராணுவம், தக்ஸின், வெளிநாட்டில் இருந்துக் கொண்டு குழப்பத்தை எற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

வெற்றியை நோக்கி தென். ஆப்ரிக்கா !

கேப் டவுன் நகரில் நடந்து வரும் மூன்றாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முன்னனி வீரர்களை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், அதன் கடைநிலை ஆட்டக்காரர்கள் தென் ஆப்ரிக்காவின் வெற்றியை தாமதப்படுத்தும் போக்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
சற்று முன்வறை, ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் இருவர் கைது

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக கிருஷ்ணகிரி காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல் துறையினர் கூறுகையில், கிருஷ்ணகிரி பெரியகல்லுபள்ளி வனப்பகுதி அருகே காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது வனப்பகுதிக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்த தேவராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நரசிம்மாச்சாரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

93 திபெத்திய புத்த பிக்குகள் கைது!

திபெத்திய கிராமம் ஒன்றில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 93 திபபெத்திய புத்த பிக்குகளை சீன காவல்துறை கைது செய்துள்ளது.

கின்ஹாய் மாநிலத்தில் லக்யாப் என்ற நகரில் சனிக்கிழமையன்று நூற்றுக்கும் அதிகமானவர்கள் நகரின் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக சீன செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த தாக்குதலில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் காயமுற்றதாக சீன அதிகாரிகள் கூறியதாக அந்த தகவல் மேலும் கூறுகிறது.

ஆறு பேர் கைது செய்யப் பட்டதாகவும், 89 பேர் தாங்களாகவே சரனடைந்ததாகவும், 95 பேரில் இருவரைத் தவிர மற்றவர்கள் புத்த பிக்குள் என்று சீன செய்தி நிறுவனம் கூறுகிறது.

கஷ்மீர் துப்பாக்கிச்சன்டையில் 10 பேர் பலி

கஷ்மீரில் இராணுவத்தினருக்கும் பிரிவினைக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சன்டையில் ஒரு மேஜர் உட்பட 4 இராணுவத்தினரும், 6 பிரிவினைவாதிகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புச் செய்தியாளர் இன்று தெரிவித்தார்.

குப்வாரா மாவட்டத்தின் ஹப்ரதா காடுகளில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலை ஒட்டி நேற்று இந்த தாக்குதலை இராணுவம் தொடுத்து வருகிறது.

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவிற்கு மாற்றம்

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடப்பது உறுதியாகிவிட்டது. இன்று BCCI யின் அவசரக் கூட்டம் மும்பையில் நடந்தது. மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் போட்டிகள் நடைபெறுவதாக இருந்ததையொட்டி, போட்டிகளை தள்ளி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் BCCI யை கேட்டுக் கொண்டது. முதலில் போட்டிகள் ஒத்திவைப்பதாக கூறி வந்த BCCI, வியாபாரம் மற்றும் ஸ்பான்ஸர்களின் வேண்டுகோளுக்கிணங்க வேறு நாடுகளில் நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, இங்கிலாந்தும் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக BCCI வட்டாரம் தெரிவிக்கின்றன.

பா.ம.க., தி.மு.க. அணிக்கு வரவேண்டும் - திருமாவளவன்

பாமக திமுக அணிக்கு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிற ஆவல் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கிடையே மட்டுமின்றி பெரும்பான்மையான தொண்டர்களிடையேயும் மேலோங்கியுள்ளது.

மொழி மற்றும் இனப்பாதுகாப்பு களங்களில் இருகட்சிகளும் தோழமையோடு பணியாற்றி வருகிறது. இதனால் சமூக நல்லிணக்க சூழல் வளர்ந்துள்ளது. இச்சூழல் தொடர வேண்டுமென்பதை விடுதலை சிறுத்தைகள் மனமாற விரும்புகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறும் தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது. தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையோடும், தோழமையோடும் உளப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல : நக்வி

பாரதீய ஜனதா கட்சி கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல என்று அதன் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

கோயில், மசூதி, தேவாலயம், குருத்வாரா போன்றவற்றைக் கட்டுவதற்கு பாரதீய ஜனதா கட்சி கட்டுமான நிறுவனம் ஒன்றும் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அது, மதத்தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலோதான் அமைய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக் கிழமையன்று கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். இவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் ராஜ்நாத் சிங், ராமர் கோயில் கட்டுவது பா.ஜ.க.வின் முக்கிய குறிக்கோள் மற்றும் ஆசை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், தேசியவாத காங். இடையே தொகுதி உடன்பாடு!

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங். இடையே தொகுதி உடன்பாடு ஏற்ப்பட்டது.


காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.


கடந்த சில நாட்களாக இவ்விரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி இருந்த நிலையில் இந்த உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா அதிரடி ரன் குவிப்பு

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் அபாரமாக விளையாடி 651 ஓட்டங்கள் குவித்தனர். டீ வில்லர்ஸ் அதிரடியாக விளையாடி 164 குவித்தார், இதில் 12 பவுன்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். சற்று முன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட துவங்கிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 33 ஒட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

கச்ச தீவு புனித தலமாக இலங்கை அறிவிப்பு

Published on: // ,
சர்ச்சைக்க்குறிய கச்ச தீவு பகுதியை புனித தலமாக இலங்கை தனது நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியா மற்றும் இலங்கைக்கு பிரச்சினைக்குரிய இடமாக இருந்து வந்த அப்பகுதி, 1976 ஆம் ஆண்டு, செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டாலும், இந்திய மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய இலங்கை மீனவர்களிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலாலும் தமிழகத்தில் மீண்டும் இது ஒர் பிரச்சினையாகப்பட்டு பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில், இலங்கை அரசின் அறிவிப்பு, தமிழகத்தில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ச.ம.க. 15 தொகுதிகளில் போட்டி - சரத்குமார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "மக்களவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

எனவே, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம் 15 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். நான் எந்தத் தொகுதியில் போட்டுயிடுவேன் என்பது பற்றி அடுத்த வாரம் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார்.

சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியராக பஃரீது ஜக்கரியா தேர்வு

Published on: // ,
CNN நிகழ்ச்சி அமைப்பாளர் பஃரீது ஜக்கரியா, அமெரிக்காவில் வசிக்கும் சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகாளாக, அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறைகளில் பணி புரிந்து சாதனை படைத்து வருபவர்களை கண்டறிந்து இவ்விருதுகளை வழங்கிவருகிறது. பஃரீது ஜக்கரியா CNN தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அபாரம் - 32 ஆண்டுகளுக்குப் பின் நியூ. முதல் டெஸ்ட் வெற்றி

இந்தியா, நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. டோனி தலைமயில் சமீபகாலமாக அட்டகாசமாக அசத்தி வரும் இந்தியா, 32 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வென்றுள்ளது.இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முன்னனி வீரர்கள் அனவரும் பெவிலியன் திரும்ப, அதிரடி ஆட்டக்காரர் மெக்கெல்லம் சிறப்பாக விளையாடி 84 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 6 விக்கெட் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகனாக சாதனை மன்னன் டென்டுல்கர் தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபர் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம்

Published on: // ,
தற்போதைய உலகலாவிய நிதி நெருக்கடியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சுமார் 248,000 அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். அதிபர் ஆவதற்கு முன் பங்கு சந்தையில் முதலீடு செய்து இருந்த ஒபாமா, தற்போதைய நிதி நெருக்கடியில் மேற்குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்டதாக அவர் சார்பில் சமர்பிக்கப்பட்ட அவரின் சொத்து விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருணைக் கைவிடும் பா.ஜ.க.!

சர்ச்சைக்குரிய விதத்தில் வருண் பேசியதற்கு பா.ஜ.க., எந்த விதத்திலும் பொறுப்பில்லை என அக்கட்சி தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளது.

உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பிரசாரத்தின் போது வருண்காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷன் பா.ஜ.க.,வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது .

இந்த நோட்டீஸ் குறித்து கருத்து ‌தெரிவித்துள்ள பா.ஜ.க., வருண் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பல்ல, தேர்தல் கமிஷன் வருண் பேச்சு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் . இதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைக்க வேண்டும் . இவ்வாறு பா.ஜ., கூறியுள்ளது . மேலும் இது தொடர்பாக பா.ஜ., வுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

கஷ்மீரில் 3 இராணுவத்தினர் கொலைக் குற்றவாளியாக அறிவிப்பு!

ஜம்மு கஷ்மீரில் கடந்த மாதம் பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்ற குற்றச் சாட்டை விசாரிக்க அமைக்கப் பட்ட விசாரணை நீதி மன்றம் மூன்று இராணுவத்தினர் குற்றம் செய்தததாக அறிவித்தது. அவர்கள் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

ஸ்ரீநகரில் 15ஆம் கம்பெணியின் பிரிகேடியர் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஒரு துணை கமிஷனர் மற்றும் இரு இராணுவ வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீதிமன்ற விசாரணை விரைவில் துவங்கும். குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை இருக்கக் கூடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

இராணுவம் மனித உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இவர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் அறியலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பிப்ரவரி 21ஆம் நாள் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை அடுத்து கஷ்மீர் முழுவதும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்ங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.

சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டி!

ஐ.நா. துணைச் செயலாளராக பதவி வகித்த சசி தரூர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளார்.
சசி தரூர், ஐ.நா சபை பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


கேரளாவில் இருந்து போட்டியிடும் 16 வேட்பாளர்களையும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 8 வேட்பாளர்களையும், சட்டீஸ்கரில் இருந்து 2 வேட்பாளர்களையும், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒரு வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி இந்தப் பட்டியலில் அறிவித்துள்ளது.

கஷ்மீரில் மூன்று கொரில்லாக்கள் கொல்லப் பட்டனர்

கஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராடும் இயக்கங்களைச் சேர்ந்த மூன்று கொரில்லாக்கள் இன்று கொல்லப் பட்டனர். கஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் அருகே உள்ள ரங்வர் என்னும் வனப் பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொல்லப் பட்டனர்.

இன்று நடந்த தேடுதலின்போது வனத்தைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் நடந்த துப்பாக்கிச் சன்டையில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பறக்கும் விமானத்தில் குழந்தையைப் பெற்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்ற பெண்.

நியூசிலாந்து (AFP) பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் அங்கிருந்த குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டார்.

போலீசாரும் பசுபிக் ப்ளூ விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்தாக நியூசிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி நேற்று ஒளிபரப்பானது.

விமானம் சுத்தம் செய்யும் பணியாளரால் விமானம் தரை இறங்கிய பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அக்குழந்தை கழிவறைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

150 பயணிகளுடன் சென்ற அவ்விமானத்தில் யாரும் குழந்தை பெற்றதாக யாதொரு சாத்தியக்கூறும் காணப்படவில்லை.

ஆனால் அப்பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விட்டதாக வந்து கேட்டபோது அப்பெண்ணின் பலவீனத்தாலும் ரத்தக் கறையுடன் காணப்பட்டதாலும் சந்தேகமுற்ற அதிகாரிகள் விசாரித்தபோது மேற்கண்ட விஷயம் தெரிய வந்தது.

தற்போது தாயும் குழந்தையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!