வெற்றியை நோக்கி தென். ஆப்ரிக்கா !
கிருஷ்ணகிரியில் துப்பாக்கியுடன் இருவர் கைது
அப்போது வனப்பகுதிக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்த தேவராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நரசிம்மாச்சாரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
93 திபெத்திய புத்த பிக்குகள் கைது!
கின்ஹாய் மாநிலத்தில் லக்யாப் என்ற நகரில் சனிக்கிழமையன்று நூற்றுக்கும் அதிகமானவர்கள் நகரின் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக சீன செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்த தாக்குதலில் காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் காயமுற்றதாக சீன அதிகாரிகள் கூறியதாக அந்த தகவல் மேலும் கூறுகிறது.
ஆறு பேர் கைது செய்யப் பட்டதாகவும், 89 பேர் தாங்களாகவே சரனடைந்ததாகவும், 95 பேரில் இருவரைத் தவிர மற்றவர்கள் புத்த பிக்குள் என்று சீன செய்தி நிறுவனம் கூறுகிறது.
கஷ்மீர் துப்பாக்கிச்சன்டையில் 10 பேர் பலி
குப்வாரா மாவட்டத்தின் ஹப்ரதா காடுகளில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலை ஒட்டி நேற்று இந்த தாக்குதலை இராணுவம் தொடுத்து வருகிறது.
IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவிற்கு மாற்றம்
பா.ம.க., தி.மு.க. அணிக்கு வரவேண்டும் - திருமாவளவன்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிற ஆவல் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கிடையே மட்டுமின்றி பெரும்பான்மையான தொண்டர்களிடையேயும் மேலோங்கியுள்ளது.
மொழி மற்றும் இனப்பாதுகாப்பு களங்களில் இருகட்சிகளும் தோழமையோடு பணியாற்றி வருகிறது. இதனால் சமூக நல்லிணக்க சூழல் வளர்ந்துள்ளது. இச்சூழல் தொடர வேண்டுமென்பதை விடுதலை சிறுத்தைகள் மனமாற விரும்புகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறும் தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது. தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையோடும், தோழமையோடும் உளப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க. கோயில் கட்டுமான நிறுவனம் அல்ல : நக்வி
கோயில், மசூதி, தேவாலயம், குருத்வாரா போன்றவற்றைக் கட்டுவதற்கு பாரதீய ஜனதா கட்சி கட்டுமான நிறுவனம் ஒன்றும் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அது, மதத்தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலோதான் அமைய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக் கிழமையன்று கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். இவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் ராஜ்நாத் சிங், ராமர் கோயில் கட்டுவது பா.ஜ.க.வின் முக்கிய குறிக்கோள் மற்றும் ஆசை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ், தேசியவாத காங். இடையே தொகுதி உடன்பாடு!
காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 22 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா அதிரடி ரன் குவிப்பு
கச்ச தீவு புனித தலமாக இலங்கை அறிவிப்பு
ச.ம.க. 15 தொகுதிகளில் போட்டி - சரத்குமார்
கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "மக்களவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
எனவே, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம் 15 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். நான் எந்தத் தொகுதியில் போட்டுயிடுவேன் என்பது பற்றி அடுத்த வாரம் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார்.
சிறந்த வெளிநாட்டு வாழ் இந்தியராக பஃரீது ஜக்கரியா தேர்வு
இந்தியா அபாரம் - 32 ஆண்டுகளுக்குப் பின் நியூ. முதல் டெஸ்ட் வெற்றி
அமெரிக்க அதிபர் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம்
வருணைக் கைவிடும் பா.ஜ.க.!
உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பிரசாரத்தின் போது வருண்காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷன் பா.ஜ.க.,வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது .
இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க., வருண் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பல்ல, தேர்தல் கமிஷன் வருண் பேச்சு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் . இதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைக்க வேண்டும் . இவ்வாறு பா.ஜ., கூறியுள்ளது . மேலும் இது தொடர்பாக பா.ஜ., வுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கஷ்மீரில் 3 இராணுவத்தினர் கொலைக் குற்றவாளியாக அறிவிப்பு!
ஸ்ரீநகரில் 15ஆம் கம்பெணியின் பிரிகேடியர் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.
ஒரு துணை கமிஷனர் மற்றும் இரு இராணுவ வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீதிமன்ற விசாரணை விரைவில் துவங்கும். குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை இருக்கக் கூடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.
இராணுவம் மனித உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இவர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் அறியலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பிப்ரவரி 21ஆம் நாள் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை அடுத்து கஷ்மீர் முழுவதும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்ங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.
சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டி!
கஷ்மீரில் மூன்று கொரில்லாக்கள் கொல்லப் பட்டனர்
இன்று நடந்த தேடுதலின்போது வனத்தைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் நடந்த துப்பாக்கிச் சன்டையில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பறக்கும் விமானத்தில் குழந்தையைப் பெற்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்ற பெண்.
நியூசிலாந்து (AFP) பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் அங்கிருந்த குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டார்.
போலீசாரும் பசுபிக் ப்ளூ விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்தாக நியூசிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி நேற்று ஒளிபரப்பானது.
விமானம் சுத்தம் செய்யும் பணியாளரால் விமானம் தரை இறங்கிய பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அக்குழந்தை கழிவறைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
150 பயணிகளுடன் சென்ற அவ்விமானத்தில் யாரும் குழந்தை பெற்றதாக யாதொரு சாத்தியக்கூறும் காணப்படவில்லை.
ஆனால் அப்பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விட்டதாக வந்து கேட்டபோது அப்பெண்ணின் பலவீனத்தாலும் ரத்தக் கறையுடன் காணப்பட்டதாலும் சந்தேகமுற்ற அதிகாரிகள் விசாரித்தபோது மேற்கண்ட விஷயம் தெரிய வந்தது.
தற்போது தாயும் குழந்தையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



