Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

ஆறு வயது சிறுமியைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு.

Published on புதன், 4 பிப்ரவரி, 2009 2/04/2009 09:10:00 PM // , , , , ,


உத்தரபிரதேசத்திலுள்ள இட்டாவ எனும் இடத்தில் திருடியதாக அழைத்து வரப்பட்ட ஆறு வயது தலித் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கிய இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சப் இன்ஸ்பெக்டர் சியாம்லால் யாதவ் பணி நீக்கம் செய்யபட்டார். மற்றொருவரான சந்திரபான் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிறுமியிடம் எஸ்.பி மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தையில் வைத்து தனது பையிலிருந்து 280 ரூபாயைத் திருடியதாக கோமள் என்ற சிறுமியை அஞ்சு கதாரிய என்ற பெண் ஜஸ்வந்த்பூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்த வேளையில், காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சிறுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!