Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஜனதா தளத்திலிருந்து ஜார்ஜ் பெர்ணான்டஸ் நீக்கம்!

Published on: வெள்ளி, 3 ஏப்ரல், 2009 // , , , , , , ,
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசை ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கிவிட்டதாக அக்கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ் குமார் இன்று தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஜப்பர்பூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட பெர்ணான்டஸ் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

தேர்தலில் பெர்ணான்டஸ் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து அவர் ஜனதா தளத்தில் இல்லை. கட்சியின் முடிவுக்கு எதிராக எவரேனும் போட்டியிட்டால் அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெர்ணான்டசின் உடல்நிலையைக் காரணமாகக் கூறி அவர் போட்டியிட மறுக்கப் பட்டது. ஆனால் தான் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாகக் கூறிய அவர் கடந்த புதன் கிழமையன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நியூயார்க்கில் துப்பாக்கியால் சுட்டு நால்வர் பலி!

இன்று நியூயார்கில் உள்ள பிரிங்ஹாம்டன் எனும் இடத்தில் ஒரு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானதாகவும் 12 பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்தக் கட்டிடத்தில் அமெரிக்க குடியுரிமை வழங்கல் அலுவலகம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திற்குள் புகுந்த ஒருவன் இன்று காலை (உள்ளூர் நேரம்) 10.30 மணிக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமுற்றுள்ளனர். மேலும் அந்தக் கட்டிடத்தில் இருந்த 41 பேரை பிணைக் கைதிகளாக அவன் பிடித்து வைத்துள்ளான்.

அந்தப் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் எப்.பி.ஐ. இறங்கியுள்ளது. அவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

நடத்தை விதிகளை மீறியதாக அசாருதீனுக்கு அறிவிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் 31ஆம் தேதி மொராதாபத்தில் நடந்த தேர்தல் பேரணியின் போது அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக வாகனங்கள் பேரணியில் சென்றது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ம.ம.க. கூட்டணி முடிவு நாளை அறிவிக்கிறது

மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழு நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய நிலைபாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப் பட்டுவிட்டதாகவும், இதனை நாளை சென்னையில் நடக்க இருக்கும் கட்சியின் செயற்குழுவில் அறிவிக்கும் என்றும் இன்று அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்த அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் ம.ம.க.வின் முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என்று கூறினார்.

தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி தர முன் வந்தததால் கூட்டணியில் சிக்கல் நிலவியது. பின்னர் தி.மு.க. இரு தொகுதிகளை ஒதுக்கித் தர முன்வந்துள்ளதாகவும், ஆனால் ம.ம.க. வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை ம.ம.க. ஏற்கவில்லை எனவும், மத்திய சென்னை, வேலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ம.ம.க. தனித்துப் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள மக்களுக்கு கிலோ 2 ரூபாய் வீதம் மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
  • தீவிரவாதத்துக்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
  • வருமான வரி கட்ட உச்ச வரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும்.
  • நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
  • வயது முதியோர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • விவசாய கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
  • ராமர் பாலத்தை பாதுகாக்க வேறு பாதையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.
  • ஏழைகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.
  • வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்படும்.
  • பாதுகாப்பு படையினருக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்.
  • ராமர் கோயில் கட்டும் பணியில் பாஜக முனைப்புடன் செயல்படும்.
  • இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை தரப்படும்.
  • வறுகை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும்.
போன்ற முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார சரிவை சீர்படுத்த ரூ.55 லட்சம் கோடி, G-20 நாடுகள் முடிவு


G-20 நாடுகளின் மாநாடு லண்டனில் நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் மெத்வதேவ், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சீர்செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பொருளாதாரத்தை சரிசெய்ய ரூ.55 லட்சம் கோடி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இவற்றை சர்வதேச நிதி அமைப்பு (IMF) மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!