Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

நடத்தை விதிகளை மீறியதாக அசாருதீனுக்கு அறிவிக்கை!

Published on வெள்ளி, 3 ஏப்ரல், 2009 4/03/2009 07:11:00 PM // , , , , ,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மார்ச் 31ஆம் தேதி மொராதாபத்தில் நடந்த தேர்தல் பேரணியின் போது அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக வாகனங்கள் பேரணியில் சென்றது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!