Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நியூயார்க்கில் துப்பாக்கியால் சுட்டு நால்வர் பலி!

Published on வெள்ளி, 3 ஏப்ரல், 2009 4/03/2009 11:03:00 PM // , , , , , , ,

இன்று நியூயார்கில் உள்ள பிரிங்ஹாம்டன் எனும் இடத்தில் ஒரு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானதாகவும் 12 பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்தக் கட்டிடத்தில் அமெரிக்க குடியுரிமை வழங்கல் அலுவலகம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்திற்குள் புகுந்த ஒருவன் இன்று காலை (உள்ளூர் நேரம்) 10.30 மணிக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமுற்றுள்ளனர். மேலும் அந்தக் கட்டிடத்தில் இருந்த 41 பேரை பிணைக் கைதிகளாக அவன் பிடித்து வைத்துள்ளான்.

அந்தப் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் எப்.பி.ஐ. இறங்கியுள்ளது. அவனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!