Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பயங்கரவாத மிரட்டல் எதிரொலி: ப.சிதம்பரம் - அத்வானி சந்திப்பு

எதிர்வரும் 15ஆவது மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிக்ள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை தெரிவித்திருந்தது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ் முகமது, ஹூஜி ஆகிய தீவிரவாத இயக்கங்களின் தகவல் தொடர்புகளை இடை மறித்து கேட்டபோது இந்த சதி
முக்கிய தலைவர்களை கொன்று அதன் மூலம் தேர்தலை சீர் குலைக்க அவர்கள் திட்டம் தீட்டி இருந்தது உளவுத்துறைக்கு தெரியவந்தது.

பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, மத்தியஅமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராகுல், லல்லு பிரசாத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான்,ஜெயலலிதா உள்ளிட்ட 40 அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் குறிவைத்து இருந்தது தெரியவந்தது.

இந்த 40 தலைவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். காவல்துறைக்கும் துணை இராணுவத்துக்கும் பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக, மேலும் விளக்கமறிய அத்வானி விரும்பியதால், ப.சிதம்பரம் அவரைச் சந்தித்து அதுபற்றி விளக்கினார். அத்வானிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அவர் விளக்கியதுடன் என்னமாதிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

"பயங்கரவாதத்தை ஒழிக்க மதவாதத்தை ஒழிக்கவேண்டும்"- ப.சிதம்பரம்

"பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டுமானால், முதலில் மதவாதத்தை ஒழிக்கவேண்டும்" என்று நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு ஒற்றுமையாக இருந்தால் தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியம் ஆனால் பாரதிய ஜனதா போன்ற மதவாத கட்சிகள் நாட்டைத் துண்டாட நினைக்கின்றன. மதவாதத்தை ஒழிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்க இயலாது. மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சி மட்டும் தான் மத்தியில் ஆட்சியமைக்க தகுதியுடையது. அதனால் மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க ‌வேண்டும். தேர்தலை அமைதியாக நடத்த போதிய படை பலத்தை தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்‌ளோம்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

சமாஜ்வாடி பொதுச்செயலாளரானார் சஞ்சய்தத்!

நடிகர் சஞ்சய்தத் அண்மையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் லக்னோ தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுருந்தார். ஆனால் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற அவர் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது.


இந்நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தன்னை மிரட்டியதாக சஞ்சய்தத் பரபரப்புப் புகார் தெரிவித்திருந்தார்.

தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சஞ்சய்தத்துக்கு உயர்ந்த பதவியான பொதுச்செயலாளர் பதவியை சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் வழங்கியுள்ளார்.

சினிமா

மலேசியப் பிரதமர் பதவி விலகினார்!


மலேசியப் பிரதமர் பதவி விலகினார்!

மலேசியப் பிரதமர் அப்துல்லா அஹமது பதாவி இன்று திடீரென தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். மலேசிய மன்னரிடம் இன்று அவர் தனது விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
ஆளும் கட்சியில் அவருக்கு செல்வாக்கில் கடும் சரிவு ஏற்பட்டதாலும், முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் அவர் இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து துணை பிரதமர் நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. நஜீப் முன்னாள் பிரதமர் அப்துர் ரஸாக்கின் மகனார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்சில் ஏழு பேருடன் சென்ற விமானத்தைக் காணவில்லை!

மணிலா : இன்று வடக்கு பிலிப்பைன்சில் இருந்து 5 பயணிகள் மற்றும் இரு பணியாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று புறப்பட்ட சில நேரத்தில் காணவில்லை என்று பிலிப்பைன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறினார்கள்.

ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட RP-C764 வகை விமானம் காகயான் மாகாணத்தில் உள்ள டுகேகராவ் விமான நிலையத்திலிருந்து இன்று காலை (உள்ளூர் நேரம்) 8.55 மணிக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து 30 நிமிட பயண தூரத்தில் இசபெலா மாகாணத்தின் மகனகான் விமான நிலையத்தை அடைய வேண்டிய இவ்விமானம் இதுவரை எந்த விமான நிலையத்தையும் சென்றடையவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு "வெற்றி நமதே" என்று பெயரிடப் பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய விசயங்கள் வருமாறு:

  • இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
  • இலங்கை போர் நிறுத்தம் ஏற்பட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்
  • நெல் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அரசை திமுக வலியுறுத்தும்
  • மாநில நதிகளின் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்குமாறு திமுக கோரிக்கை விடுக்கும்.
  • தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • சேது கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட கோரிக்கை
  • அருந்ததியினருக்கு அனைத்து மாநிலத்திலும் இடஒதுக்கீடு தர கோரிக்கை
  • ஊரக வேலைவாய்ப்பு 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
  • எஸ்.சி. எஸ்டிக்கு இலவச கல்வி
  • அரவாணிகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்க திமுக வலியுறுத்தும்
  • அகில இந்திய அளவில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம்
  • பொருளாதார சரிவில் வேலை இழந்தோருக்கு நிதியுதவி அளிப்பது.
போன்ற திட்டங்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

ஜி 20 மாநாடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : வங்கிகள் தாக்கப் பட்டன, ஒருவர் பலி

லண்டனில் நடைபெற்று வரும் ஜ 20 மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்கிகளைத் தாக்கினர். காவல்துறையினரிடம் சன்டையிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டு, "வங்கி அதிகாரிகளை தூக்கில் இடுங்கள்", "வங்கிகளை அகற்றுங்கள்" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. இங்கிலாந்து வங்கி அருகே நடந்த ஆர்ப்பாட்டம் பின்னர் ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் லண்டன் தலைமையகம் அருகில் வன்முறையாய் மாறியது. அந்த வங்கியை அவர்கள் தாக்கினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் காவலர்களுக்கும் சன்டை ஏற்பட்டது. இதில் பல அதிகாரிகள் காயமுற்றதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராயல் ஸ்காட்லாந்து வங்கி பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வங்கியின் நட்டம் 40 பில்லியன் டாலர்கள் என்ற செய்தி வந்ததிலிருந்து, பொதுமக்களின் கோபம் இந்த வங்கி மீது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!