Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஜி 20 மாநாடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : வங்கிகள் தாக்கப் பட்டன, ஒருவர் பலி

Published on வியாழன், 2 ஏப்ரல், 2009 4/02/2009 10:04:00 AM // , , , , , , , ,

லண்டனில் நடைபெற்று வரும் ஜ 20 மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்கிகளைத் தாக்கினர். காவல்துறையினரிடம் சன்டையிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டு, "வங்கி அதிகாரிகளை தூக்கில் இடுங்கள்", "வங்கிகளை அகற்றுங்கள்" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. இங்கிலாந்து வங்கி அருகே நடந்த ஆர்ப்பாட்டம் பின்னர் ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் லண்டன் தலைமையகம் அருகில் வன்முறையாய் மாறியது. அந்த வங்கியை அவர்கள் தாக்கினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் காவலர்களுக்கும் சன்டை ஏற்பட்டது. இதில் பல அதிகாரிகள் காயமுற்றதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராயல் ஸ்காட்லாந்து வங்கி பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வங்கியின் நட்டம் 40 பில்லியன் டாலர்கள் என்ற செய்தி வந்ததிலிருந்து, பொதுமக்களின் கோபம் இந்த வங்கி மீது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!