Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

பிலிப்பைன்சில் ஏழு பேருடன் சென்ற விமானத்தைக் காணவில்லை!

Published on வியாழன், 2 ஏப்ரல், 2009 4/02/2009 03:49:00 PM // , , , , ,

மணிலா : இன்று வடக்கு பிலிப்பைன்சில் இருந்து 5 பயணிகள் மற்றும் இரு பணியாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று புறப்பட்ட சில நேரத்தில் காணவில்லை என்று பிலிப்பைன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறினார்கள்.

ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட RP-C764 வகை விமானம் காகயான் மாகாணத்தில் உள்ள டுகேகராவ் விமான நிலையத்திலிருந்து இன்று காலை (உள்ளூர் நேரம்) 8.55 மணிக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து 30 நிமிட பயண தூரத்தில் இசபெலா மாகாணத்தின் மகனகான் விமான நிலையத்தை அடைய வேண்டிய இவ்விமானம் இதுவரை எந்த விமான நிலையத்தையும் சென்றடையவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!