Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

பயங்கரவாத மிரட்டல் எதிரொலி: ப.சிதம்பரம் - அத்வானி

எதிர்வரும் 15ஆவது மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிக்ள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை தெரிவித்திருந்தது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ் முகமது, ஹூஜி ஆகிய தீவிரவாத இயக்கங்களின் தகவல் தொடர்புகளை இடை மறித்து கேட்டபோது இந்த சதி
முக்கிய தலைவர்களை கொன்று அதன் மூலம் தேர்தலை சீர் குலைக்க அவர்கள் திட்டம் தீட்டி இருந்தது உளவுத்துறைக்கு தெரியவந்தது.

பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, அத்வானி, மத்தியஅமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராகுல், லல்லு பிரசாத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான்,ஜெயலலிதா உள்ளிட்ட 40 அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் குறிவைத்து இருந்தது தெரியவந்தது.

இந்த 40 தலைவர்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். காவல்துறைக்கும் துணை இராணுவத்துக்கும் பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக, மேலும் விளக்கமறிய அத்வானி விரும்பியதால், ப.சிதம்பரம் அவரைச் சந்தித்து அதுபற்றி விளக்கினார். அத்வானிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து அவர் விளக்கியதுடன் என்னமாதிரி பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!