Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 07, 2025

கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு ஆறுதல்

ஆக்லந்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் மட்டைப்பந்தாட்டத்தில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி கண்டுள்ளது.முதலில் மட்டை பிடித்தாடிய இந்தியா 10 ஆட்டக்காரர்களையும் இழந்து 149 ஓட்டங்களே பெற்றது. 74 பந்துகளில் 43 ஓட்டங்கள் (ஆட்டம் இழக்காமல்) பெற்றார் ரோகித் சர்மா. வழக்கமான அதிரடியை வெளிப்படுத்திய சேவாக் 27 பந்துகளில் 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இத்துடன் யுவராஜ்(11) தவிர, ஏனைய இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒற்றைஇலக்க ஓட்டங்கள் மட்டுமே பெற்று...

கத்தோலிக்க மதகுருக்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க மத குருக்களுக்கு எதிராகக் கூறப்படும் செக்ஸ் குற்றச் சாட்டுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக கத்தோலிக்கத் திருச்சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.2008ஆம் ஆண்டு கூறப்பட்ட இத்தகைய குற்றச் சாட்டுகள் தொடர்பாக கத்தோலிக்கத் திருச்சபை 436 மில்லியன் அமெரிக்க டலார்கள் செலவு செய்யப்பட்டதாகவும், இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்தக் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப் பட்டவர்களில் ஐந்தில்...

மருமகளைக் கொன்று காவல்துறையிடம் சரணடைந்த மாமியார்!

ஒரு பெண் தன் மருமகளைக் கொன்றுவிட்டு காவல்துறையில் சரனடைந்தார். கொல்கத்தாவில் வெள்ளிக் கிழமையன்று இச்சம்பவம் நடந்தது.ஒரிசாவின் ரூர்கேலாவைச் சார்ந்த தீபக் மென்பொருள் வல்லுநராக கொல்கத்தாவில் பணி புரிந்து வந்தார். அங்கு திப்யாஞ்சலி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து திருமணம் செய்தார். அவர்களுடன் தங்குவதற்காக தீபக்கின் தாயார் ஸ்நேகலதா மலிக் கடந்த சில தினங்களுக்கு முன் வந்தார். கொல்கத்தாவின் புறநகரான ராஜர்ஹத் பகுதியில் இவர்கள் தங்கியிருந்தனர்.மாமியாருக்கும் மருமகளுக்கும்...

வாக்காளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. பணம்: விசாரணைக்கு

உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற காட்சி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானதை அடுத்து, மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வாரணாசியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மக்களுக்கு பணம் கொடுப்பது தனக்குத் தெரிய வந்தவுடன், வாரணாசி மாவட்ட நீதிபதி இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தான் கேட்டுள்ளதாக உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல்...

டில்லியில் சாமியாரைத் தாக்கவிட்டு கோயிலில்

டில்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியில் வியாழக் கிழமை இரவு சாமியாரைத் தாக்கிவிட்டு, கோயிலில் இருந்த சாமி சிலைகளின் தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப் பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.வெள்ளிக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மெஹ்ராலி பகுதியில் உள்ள மண்டி கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.தங்களுடைய நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கோயிலைத் திறக்குமாறு கொள்ளைக் கும்பல் சுபாஷ் கிரி மஹராஜ் என்ற சாமியாரிடம் கோரினர். அவர் கோயிலைத் திறந்ததும்...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!