Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு ஆறுதல்

ஆக்லந்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் மட்டைப்பந்தாட்டத்தில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி கண்டுள்ளது.

முதலில் மட்டை பிடித்தாடிய இந்தியா 10 ஆட்டக்காரர்களையும் இழந்து 149 ஓட்டங்களே பெற்றது. 74 பந்துகளில் 43 ஓட்டங்கள் (ஆட்டம் இழக்காமல்) பெற்றார் ரோகித் சர்மா. வழக்கமான அதிரடியை வெளிப்படுத்திய சேவாக் 27 பந்துகளில் 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இத்துடன் யுவராஜ்(11) தவிர, ஏனைய இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒற்றைஇலக்க ஓட்டங்கள் மட்டுமே பெற்று வீழ்ந்தனர். பந்துவீச்சில் நியுசிலாந்து தரப்பில் ரைடர் மூவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

36.3 சுற்று பந்துவீச்சில் 149 ஓட்டங்கள் பெற்று எளிதான இலக்கை இந்தியா அளிக்க, இந்திய இலக்கை பதட்டமின்றி எதிர்கொண்ட நியூசிலாந்து இருவரை மட்டுமே இழந்து வெற்றிகண்டது.
ஆட்டநாயகன் ரைடர் 49 பந்துகளில் 63 ஓட்டங்களும், குப்டில் 50 பந்துகளில் 57 ஓட்டங்களும் பெற்றனர்.

இதற்கு முன் நடைபெற்ற ஏனைய நான்கில், மூன்று ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!