Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

மருமகளைக் கொன்று காவல்துறையிடம் சரணடைந்த மாமியார்!

Published on சனி, 14 மார்ச், 2009 3/14/2009 02:18:00 AM // , , , , , , ,

ஒரு பெண் தன் மருமகளைக் கொன்றுவிட்டு காவல்துறையில் சரனடைந்தார். கொல்கத்தாவில் வெள்ளிக் கிழமையன்று இச்சம்பவம் நடந்தது.

ஒரிசாவின் ரூர்கேலாவைச் சார்ந்த தீபக் மென்பொருள் வல்லுநராக கொல்கத்தாவில் பணி புரிந்து வந்தார். அங்கு திப்யாஞ்சலி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து திருமணம் செய்தார். அவர்களுடன் தங்குவதற்காக தீபக்கின் தாயார் ஸ்நேகலதா மலிக் கடந்த சில தினங்களுக்கு முன் வந்தார். கொல்கத்தாவின் புறநகரான ராஜர்ஹத் பகுதியில் இவர்கள் தங்கியிருந்தனர்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே சுமுகமான உறவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி அடுக்களையில் இருந்த கத்தியால் தன்னுடைய மருமகளைக் குத்திக் கொலை செய்தார். திப்யாஞ்சலி அதே இடத்தில் மரணமடைந்தார். அதன் பிறகு ஸ்னேகலதா காவல்துறையிடம் சரனடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!